பிறந்தது
சதை பிண்டமானாலும்
வாள் கொண்டு
கிழித்து புதைத்த
மரபு...!
உடன் பிறப்புகளின்
உதிரம் சிதறினாலும்
உணர்வுகளில்
உதிக்க மறந்துவிட்ட
வீரம்...!
கலங்கமற்ற தாயின்
வாழ்வினை
கல்லிலே செதுக்கிட
கங்கை வரை
களம் கண்ட
வரலாறு..!
கலங்கிய பெண்மையின்
வழக்கிலும்
வறண்டு போன
நம் உதிரத்தின்
கொதிப்பு...!
No comments:
Post a Comment