ஆசையென்னும் கயிறு
கொண்டு இழுத்து சென்ற
வென் புனல் - அதன்
ஆணவத்தில்
விட்டு சென்ற - இதன்
வளர்ச்சியென்னும்
வண்டல் மண்...!
எல்லையோரத்தில்
எழுந்து நின்ற
ஆறு-கால் மண்டபம் - அங்கு
அறைகுறையாய்
வரையப்பட்டிருந்த
வள்ளுவரின் வரைபடம்...!
கரையெங்கும் வனப்பினை
கூட்டியிருந்த
நீலப் பசும் பாசி - அங்கும்
உதிர்ந்துவிட்ட சிறகென
சிதைந்து கிடந்த
சிறுவனின் அட்டைக் குடில்...!
கடந்து விட்ட
மழை வெள்ளத்தில்
சிதிலம் சிதிலமென
சிதைந்திருந்தும்
சிவன் சூடியிருக்கும்
பிறை நிலவாய் - இவ்
ஆற்றுப்பதுகை...!
No comments:
Post a Comment