Wednesday, 6 November 2013

காவிரி டெல்டா

வற்றாத நதிமகளின்
       வளத்தினில் வளர்ந்திருந்த
நெற்கதிர்கள்
       வானுயர புல்லாங்குழலாய்
கானம் இசைத்திருந்த
       மூங்கில் தோட்டம்..!

துள்ளிக் குதித்தோடும்
       முயல் தூவிச்சென்ற
வர்ண ஜாலம்
        எட்டாத  குடைக்குள்ளே
கசிந்து வந்த
         வெண் மழைச் சாரல்...!

ஒண்டிக் கொள்ள
        குடிசையில்லாத துரத்தில்
அல்லி வீற்றிருந்த
         தாமரைக் குளம்...!

பாதிகால் நனையாது
       பாய்ந்திருந்த தண்ணீர் - அங்கே
பயந்து பயந்து
        நீந்திச் சென்ற
கெண்டை மீின்...!

பாதி வயிறு  நிறைய
      சேறு மிதிக்கின்ற
மனிதக் கூட்டம்
     அங்கேயும்
சோர்வு தெறியாமலிருக்க
      பாடி வந்த கானம்...!

No comments: