Wednesday, 6 November 2013

காவிரி டெல்டா

வற்றாத நதிமகளின்
       வளத்தினில் வளர்ந்திருந்த
நெற்கதிர்கள்
       வானுயர புல்லாங்குழலாய்
கானம் இசைத்திருந்த
       மூங்கில் தோட்டம்..!

துள்ளிக் குதித்தோடும்
       முயல் தூவிச்சென்ற
வர்ண ஜாலம்
        எட்டாத  குடைக்குள்ளே
கசிந்து வந்த
         வெண் மழைச் சாரல்...!

ஒண்டிக் கொள்ள
        குடிசையில்லாத துரத்தில்
அல்லி வீற்றிருந்த
         தாமரைக் குளம்...!

பாதிகால் நனையாது
       பாய்ந்திருந்த தண்ணீர் - அங்கே
பயந்து பயந்து
        நீந்திச் சென்ற
கெண்டை மீின்...!

பாதி வயிறு  நிறைய
      சேறு மிதிக்கின்ற
மனிதக் கூட்டம்
     அங்கேயும்
சோர்வு தெறியாமலிருக்க
      பாடி வந்த கானம்...!

Sunday, 27 October 2013

ஈர்ப்பு விசை

Gravity என்னும் படம் உண்டாக்கிய சிதறல்...

மண்ணில் வாழ்வதே
       சொர்க்கம் என்றது
விண்ணில் வாழ்ந்துவிட்ட
       வாழ்க்கையில்...!

இருக்க இடம் தேடி
      கொட்டிய கோடிகள்
போதுமென்றது
      இருப்பதே
அன்பினில் உருவான
      கருவறை
என்று சொல்லி...!

Saturday, 26 October 2013

மின்னல்

இமைக்கின்ற நொடிப்
      பொழுதில்
நிழல் விழுகின்ற
     தூரத்தில்...!

மண் கரைக்கும்
      மழை மேகம்
ஏற்றுக்கொண்ட
      மோதலுக்கு
எடுத்துவிட்ட நிழற்ப்பட
      ஒளியாய்...!

Friday, 25 October 2013

மறதி

அருகிலிருக்கும்
      சுரிய ஒளியில்
மறைந்து போகும் - அந்
      நட்சத்திரக் கூட்டம்...!

அள்ளி அனைக்கின்ற
       தாயின் அன்பில்
மறந்து போகும் - இவ்
       எத்தனை நெருடல்களும்...!

Monday, 21 October 2013

ஒற்றுமை

நேசமில்லா உறவுகளின்
      நெருக்கமும்
வாசனையில்லா மலர்களின்
      மென்மையும்
ஒன்றுதான்...!

ஒன்று அருகிலிருந்தும்
       ஆதரவற்றது
மற்றொன்று
       மகரந்தம்
சேர்க்கா மலடுகள்...!