Saturday, 16 March 2013

வாக்குறுதி

வசந்தம் வரும்
      வாழ்வு செழிக்கும் - என
சுளுரைத்து பெறப்பட்ட
      கடவுச் சீட்டில்
பாமரனின்
      சுருக்கு பையும்
களவாடப்பட்டது...!

வஞ்சகமோ இது
      வாணிபமோ
நாமுண்ணும்
      உணவு படைத்தும்
பசித்திருப்பவனை
      மவுனமாய்
தூக்கிலிடுவது...!

Sunday, 10 March 2013

மலையருவி

மலையருவி மண்பார்க்கையில்
          சிதறிய சில்லுகலாய்
நீர்த் திவலைகள்
         அலங்கரித்திருந்த
அன்றலர்ந்த மலர்கள்...!

மூலிகைச் செடியில்
        முகம் புதைத்து
மெல்ல மெல்ல
        வருடிச் சென்ற காற்று...!

வான் மகளின்
         பிரிவுதனில்
தண்ணீரின் தற்க்கொலை
       முயற்சியை
தாங்கி பிடித்த
       நில மகளின் தாய் மடி...!

நிஜமான வளமென
         நீண்டுவிட்ட மரங்களும்
 நிசப்த நிலத்தினை
         நிலை குலைக்கின்ற
நீரோடையின்
        சலசலப்பும்...!

காணுமிடமெல்லாம்
        பசுமை நிறைந்திருக்க
கண்களுக்குள்
        பதிந்துவிட்ட
கலையழகாய் - இப்
        பூஞ்சோலை...!

Friday, 1 March 2013

இளைஞ்சன்

நம்பியிருக்கிறது இளைஞ்சா
          நம்பியிருக்கிறது
நாளைய பாரதம்
          நம்பியிருக்கிறது - உன்னையே
நம்பியிருக்கிறது...!

சாதி என்பார்
         சமயம் என்பார்
சரிந்துவிடாதே
         சாக்கடைக்குள்
சரிந்துவிடாதே...!

சமத்துவம் என்னும்
        சத்தியத்தில்
சரித்திரம் படைக்கும்
       வல்லமை  உனக்கிருக்க...!

சிறு மனதுடன்
       கூட்டம் சேர்த்து
குவித்து வைக்கிற
        பணமும் -  அதில்
குற்றமற்றவரை
       குற்றவாளியாக்கும்
ஆளுமையையும்
        அழிந்து போகட்டும் - உன்னில்
அழிந்து போகட்டும்..!

அன்பு மட்டும்
       விதையாகி
தனிமனித சுதந்திரத்தில்
         திளைக்கின்ற
தரணி உனதாகட்டும்...!

 நம்பியிருக்கிறது இளைஞ்சா
          நம்பியிருக்கிறது
நாளைய பாரதம்
          நம்பியிருக்கிறது - உன்னையே
நம்பியிருக்கிறது...!

Sunday, 24 February 2013

வாழ்வே மாயம்

100  வது பதிவு

            எனது கல்லூரி பருவத்தில் "இளந்தூது" என்னும் கல்லூரி நாளிதழுக்கு நான் சமர்ப்பித்த "மனிதன் மாறிவிட்டான்" என்னும் தொகுப்பு வேறு ஒருவர் பெயரில் வெளியாகியது.

               5 வருடங்கள் சென்ற பின் தணிகைவேல் என்பவரின் மூலம் இந்த blogging  பற்றி அறிந்து கொண்டேன். உண்மையில் நம் மனம் விரும்பும் பாதையை எதிர் நோக்கிய செயல்பாடுகளில் நம் உள்மனம் எப்பொழுதும் விழிப்புடன் இருக்கும் என்பது உண்மையே.

              எனது பள்ளிப் பருவத்தில்  "வாழ்வே மாயம்" என்னும் தலைப்பில், முதல் முதலில் மேடையில் வாசிக்கப்பட்ட  வரிகள் இங்கே...

     *************************

வாழ்வே ஒரு மாயை - இதில்
        ஏனடா பல சோதனை
ஆசையும் ஒரு மாயை - அதில்
        அடைகிறோம் பல வேதனை...!

அன்பும் ஒரு மாயை - அங்குதான்
         பெறுகிறோம் நல்லுறவுகளை
கல்வியும் ஒரு மாயை - இங்கு
         கற்க்கிறோம் நல்லொழுக்கங்களை...!
  
அறிவியலும் ஒரு மாயை - இங்கே
           உணர்கிறோம் உலக அசைவுகளை
விஞ்சானமும் ஒரு மாயை - இவ்விடத்தில்
           போட்டியிட்டோம் இறைவனின் படைப்புகளை...!

எண்ணுவது நடப்பதில்லை
          நடப்பதை நினைப்பதில்லை
என்பதாலோ - இவ்
          வாழ்வே மாயம்...!


"தோல்வி நம்மை  தொட்டாலும் தொடர்ந்தது இல்லை என்றிருக்கட்டும்"
   ************************* 

Saturday, 23 February 2013

இருள் விளக்குப் பாதை

மண் குடிசை
       பாதி வேய்ந்த 
கூரை - அங்கு
      இரக்கத்துடன் 
இறங்கிவந்து
      ஒளி வீசிய 
 வெண் நிலவு...!

தன்னம்பிக்கை 
      வளர்க்க
தன்னையே 
     தற்கொலை
செய்கின்ற 
     திரிகள்...!

மகன் 
      சாதிப்பான்
மனக் 
      கனவுடன்
மண்டியிட்டு 
      தொழுகின்ற
  தாய்...!

இருள் 
      முழுவதும்
பரவிக் கிடந்த
       இலவசப் பொருட்கள்
முகம் மட்டும்
      அரசுயிட்ட 
சோதனையில்
       வியர்த்திருக்க
விடியல் வருமென
         வாசிக்கப்பட்ட நூல்கள்...!  

விடிந்த பின் 
      வீசிய
புயலெனும் பூதம்
        பெயர்த்தெடுத்த 
கூரையும்
        அரசு  அளித்த
ஆறு  ஐந்து நூறு
        நோட்டுகளும்...!

பாதி நாள்
        தந்தையுடன் 
பணிபுரிந்து
       வேய்ந்து  விட்ட
கூரையில்
       வினாவாகிய
அவன்
       இருள் விளக்குப் பாதை...!