Saturday, 23 February 2013

இருள் விளக்குப் பாதை

மண் குடிசை
       பாதி வேய்ந்த 
கூரை - அங்கு
      இரக்கத்துடன் 
இறங்கிவந்து
      ஒளி வீசிய 
 வெண் நிலவு...!

தன்னம்பிக்கை 
      வளர்க்க
தன்னையே 
     தற்கொலை
செய்கின்ற 
     திரிகள்...!

மகன் 
      சாதிப்பான்
மனக் 
      கனவுடன்
மண்டியிட்டு 
      தொழுகின்ற
  தாய்...!

இருள் 
      முழுவதும்
பரவிக் கிடந்த
       இலவசப் பொருட்கள்
முகம் மட்டும்
      அரசுயிட்ட 
சோதனையில்
       வியர்த்திருக்க
விடியல் வருமென
         வாசிக்கப்பட்ட நூல்கள்...!  

விடிந்த பின் 
      வீசிய
புயலெனும் பூதம்
        பெயர்த்தெடுத்த 
கூரையும்
        அரசு  அளித்த
ஆறு  ஐந்து நூறு
        நோட்டுகளும்...!

பாதி நாள்
        தந்தையுடன் 
பணிபுரிந்து
       வேய்ந்து  விட்ட
கூரையில்
       வினாவாகிய
அவன்
       இருள் விளக்குப் பாதை...!

No comments: