Saturday, 16 February 2013

பயனற்றவை

ஆணி வேருடன்
        பிடுங்கி எறிந்து விட்டு
மரத்தில் நிழல் தேடும்
        மனிதமும்...!

கருவினில் சிசுவினை
        பறிகொடுத்த
தாயினை போல்
       கலங்கி நின்ற காற்றும்...!

விடைதெரியா வாழ்வில்
        விடை என
விட்டு விட்டு
        பொழிகின்ற வானிலையில்
விதைக்கப்பட்ட
         விதையும்...!

வளர்ச்சியென
         தன்னை மட்டும்
வளர்த்து குளத்தின்
        சூழலை மாசு படுத்தும்
நீலப் பசும் பாசியும்...!

பாதை முழுவதும்
       தெளிக்கப் பட்டாலும்
பயனற்றவையே...!

No comments: