ஆணி வேருடன்
பிடுங்கி எறிந்து விட்டு
மரத்தில் நிழல் தேடும்
மனிதமும்...!
கருவினில் சிசுவினை
பறிகொடுத்த
தாயினை போல்
கலங்கி நின்ற காற்றும்...!
விடைதெரியா வாழ்வில்
விடை என
விட்டு விட்டு
பொழிகின்ற வானிலையில்
விதைக்கப்பட்ட
விதையும்...!
வளர்ச்சியென
தன்னை மட்டும்
வளர்த்து குளத்தின்
சூழலை மாசு படுத்தும்
நீலப் பசும் பாசியும்...!
பாதை முழுவதும்
தெளிக்கப் பட்டாலும்
பயனற்றவையே...!
Saturday, 16 February 2013
Friday, 15 February 2013
புன்னகை
எளிமையான வாழ்வினை
நிரப்ப வந்த
எதார்த்த நண்பன்...!
மருந்துகள் அல்லாத
மனித வாழ்விற்க்கான
மருத்துவம்...!
பூத்தம் புதிதாய்
பூத்த பூவின்
மலர்ச்சியிடம் - போட்டியிட்ட
மனிதத்தின்
ஒற்றை ஆயுதம்...!
நிரப்ப வந்த
எதார்த்த நண்பன்...!
மருந்துகள் அல்லாத
மனித வாழ்விற்க்கான
மருத்துவம்...!
பூத்தம் புதிதாய்
பூத்த பூவின்
மலர்ச்சியிடம் - போட்டியிட்ட
மனிதத்தின்
ஒற்றை ஆயுதம்...!
Saturday, 2 February 2013
சுயநலம்
அரசு
நாவிற்க்கு அடிபனியா
கருத்துக்கு கருத்தடை
மன சாந்திக்கு
மக்கள் கூட்டத்தின்
குருதிப் புனல்...!
மக்கள்
வந்தது நமக்கில்லை
வன்மையை வசைபாட - என
வாழத் தொடங்கினோம் - இன்று
வருங்காலம் நமக்கில்லை
நாணயத்தில்
நசுக்கப்பட்ட நாயகன்கள்...!
நிலமை
உலகமறியும் இந்தியனை
இடம் பெயரச் சொல்லும்
மாற்றம் இந்த மண்ணில்
மதத்தினை மதில் மேலேற்றி
மனிதத்தை
மண்ணுக்குள் புதைக்கின்ற
சுய நலத்தின்
சுடுகாடாய்...!
நாவிற்க்கு அடிபனியா
கருத்துக்கு கருத்தடை
மன சாந்திக்கு
மக்கள் கூட்டத்தின்
குருதிப் புனல்...!
மக்கள்
வந்தது நமக்கில்லை
வன்மையை வசைபாட - என
வாழத் தொடங்கினோம் - இன்று
வருங்காலம் நமக்கில்லை
நாணயத்தில்
நசுக்கப்பட்ட நாயகன்கள்...!
நிலமை
உலகமறியும் இந்தியனை
இடம் பெயரச் சொல்லும்
மாற்றம் இந்த மண்ணில்
மதத்தினை மதில் மேலேற்றி
மனிதத்தை
மண்ணுக்குள் புதைக்கின்ற
சுய நலத்தின்
சுடுகாடாய்...!
Saturday, 26 January 2013
மாலை மயக்கம்
அரை முற்றத்தில்
முழு முகம் காட்டும்
வெண்ணிலவு - அதன்
அழகின் மயக்கத்தில்
முத்தமிட்டுச் செல்லும்
இரும்புப் பறவை...!
வானத்தின் வனப்பில்
வட்டமிட்டு இறகடித்துப்
பறக்கும் புறாக்கள் - அதன்
இறகில் குடிகொண்டு
வாழத் துடித்து
படபடக்கின்ற கண்ணிமைகள்...!
வீதியெங்கும் விட்டுவிட்டு
எரிகின்ற மின்விளக்கு
போட்டியிட்டு விழி திறக்கின்ற
விண்மீன் கூட்டம்...!
முழு முகம் காட்டும்
வெண்ணிலவு - அதன்
அழகின் மயக்கத்தில்
முத்தமிட்டுச் செல்லும்
இரும்புப் பறவை...!
வானத்தின் வனப்பில்
வட்டமிட்டு இறகடித்துப்
பறக்கும் புறாக்கள் - அதன்
இறகில் குடிகொண்டு
வாழத் துடித்து
படபடக்கின்ற கண்ணிமைகள்...!
வீதியெங்கும் விட்டுவிட்டு
எரிகின்ற மின்விளக்கு
போட்டியிட்டு விழி திறக்கின்ற
விண்மீன் கூட்டம்...!
Friday, 25 January 2013
இரு துருவம்
நாடி பிடித்து பார்க்கா
நாசிக்குள் நுழைக்கின்ற
சுவாசக்காற்றாய்
உறவுகள்...!
உண்மையாகும் போது
உயிர் வாழும்
உடல் நரம்பில் கலந்துவிட்ட
மூச்சுக் காற்றாய்...!
மூழ்கிப் போகையில்
உருத்துவிட்ட வலியில்
தொட்டுவிட்ட மென்மையால்
துரத்தியடிக்கப் பட்ட
தும்மல் காற்றாய்...!
நாசிக்குள் நுழைக்கின்ற
சுவாசக்காற்றாய்
உறவுகள்...!
உண்மையாகும் போது
உயிர் வாழும்
உடல் நரம்பில் கலந்துவிட்ட
மூச்சுக் காற்றாய்...!
மூழ்கிப் போகையில்
உருத்துவிட்ட வலியில்
தொட்டுவிட்ட மென்மையால்
துரத்தியடிக்கப் பட்ட
தும்மல் காற்றாய்...!
Subscribe to:
Posts (Atom)