ஆயிரங்கள் கரைகின்றன
ஆட்டத்தில் ஏழைகளின்
அடிவயிறு பசித்ததிருந்தாலும்...!
நாடகங்கள் நிகழ்தத்தப்படுகின்றன
நடுத்தர மக்களின்
நரம்புத் துடிப்புகள்
நடுக்கம் கண்டாலும்...!
ஊர் தலைவர்கள் - இங்கே
உல்லாசத்தில்
உழைப்பின் உதிரங்கள்
உதாசினப்
படுத்த்ப்பட்டாலும்...!
மாளிகைகள் மகுடம்
சுட்டிக்கொள்கின்றன
இரக்கமெனும்
மாண்பிணை மறந்திருந்தாலும்...!
Friday, 7 December 2012
Friday, 30 November 2012
நிலவு
பத்து மாதம் சுமந்தவள்
பாதி வயிறு நிறைய
பார்க்கச் சொன்ன
அதிசயம்...!
தினம் தினம்
தேய்ந்து வளர்ந்தாலும்
தேயாத அழகுடன்
தொடர்கின்ற துணைவி ...!
இருள் கொண்டு வாழ்ந்தாலும்
ஒளி கொண்டு சிரிக்கின்ற
பட்டுத் தாமரை...!
பாதி வயிறு நிறைய
பார்க்கச் சொன்ன
அதிசயம்...!
தினம் தினம்
தேய்ந்து வளர்ந்தாலும்
தேயாத அழகுடன்
தொடர்கின்ற துணைவி ...!
இருள் கொண்டு வாழ்ந்தாலும்
ஒளி கொண்டு சிரிக்கின்ற
பட்டுத் தாமரை...!
Sunday, 18 November 2012
கஷ்ட காலம்
சுடு மணலின்
சூட்டினில் நடந்தாலும்
சுத்தமான உறவுகளை
சூழ்ந்து நிற்க்கின்ற
நிமிடங்களாய்...!
சந்தோசமற்ற சறுக்கல்களில்
மனம் சறுக்கினாலும்
மனம் விரும்பும்
உறவுகளை உணருகின்ற
உண்மை தினங்கள்...!
தடுமாறுகின்ற தினங்களில்
துணை நின்றாலும்
சந்தோசத்தில் விலகி நின்று
நம் நினைவுகளை அலசுகின்ற
நிஜ உறவுகளின்
அறிமுக தருணங்களாய் - இந்த
கஷ்ட காலம்...!
சூட்டினில் நடந்தாலும்
சுத்தமான உறவுகளை
சூழ்ந்து நிற்க்கின்ற
நிமிடங்களாய்...!
சந்தோசமற்ற சறுக்கல்களில்
மனம் சறுக்கினாலும்
மனம் விரும்பும்
உறவுகளை உணருகின்ற
உண்மை தினங்கள்...!
தடுமாறுகின்ற தினங்களில்
துணை நின்றாலும்
சந்தோசத்தில் விலகி நின்று
நம் நினைவுகளை அலசுகின்ற
நிஜ உறவுகளின்
அறிமுக தருணங்களாய் - இந்த
கஷ்ட காலம்...!
Tuesday, 13 November 2012
தீபம்
பூசி வைத்த இருட்டுக்குள்
புதையாத புதையளாய்
வாள் கொண்டு போராடும்
விரனின் வீரத்தின்
சூல் கொண்டு சுடுகின்ற
இரவுச் சுரியனாய்...!
வளத்தில் வழிகின்ற குளம்
தன்னையே வற்ற விட்டு
தியாகத்தின் வேராக - அதில்
வளர்க்கின்ற விருச்சமாய்
இந்த தீப ஒளி...!
Saturday, 3 November 2012
படியில் பயணம்
தொடர்வண்டியில் தொங்குகின்ற
ஊஞ்சலாய் நீ - உன்னை
தொட்டிலிட்ட தேவதையின்
உதிரம் உரைந்து
போகுமென்பதை உணராமல்...!
எதனை மயக்க
இந்த மயக்கம்
மடியில் சுமந்தவளை
மரணப் படுக்கைக்கு
கொண்டு செல்ல...!
அவள் செலவழித்த
நிமிடங்களை
திருப்பித் தர நினைக்காத
நினைவுதான் ஏனோ...!
பெற்றதனைத்தும்
அவர்களின் கொடை
அற்ப்ப ஆசைகளுக்காக
அந்தரத்தில் ஆடுகின்ற உயிரல்ல அது
கண்ணிமைக்குள் காத்து வந்த
அவர்களின் கருவிழி...!
ஊஞ்சலாய் நீ - உன்னை
தொட்டிலிட்ட தேவதையின்
உதிரம் உரைந்து
போகுமென்பதை உணராமல்...!
எதனை மயக்க
இந்த மயக்கம்
மடியில் சுமந்தவளை
மரணப் படுக்கைக்கு
கொண்டு செல்ல...!
அவள் செலவழித்த
நிமிடங்களை
திருப்பித் தர நினைக்காத
நினைவுதான் ஏனோ...!
பெற்றதனைத்தும்
அவர்களின் கொடை
அற்ப்ப ஆசைகளுக்காக
அந்தரத்தில் ஆடுகின்ற உயிரல்ல அது
கண்ணிமைக்குள் காத்து வந்த
அவர்களின் கருவிழி...!
Subscribe to:
Posts (Atom)