Monday, 3 September 2012

மௌனம்

மாலையின் மௌனத்திற்க்கு
      மயங்கி முகம் காட்டும்
வெண்ணிலவு...!

புல்வெளியின் மௌனத்தில்
      புழுங்கிய மனதினிற்க்கு
ஆறுதல் தேடி அலைபாய்கின்ற
      ஈரக்காற்று...!

தடு மாறிய குரலில்
      பேசுகின்ற சிசுவின் மௌனத்தில்
முகம் சினுங்கும் தாயின்
      முகம்...!

அதிகார வர்க்கத்திடம்
       உரிமையை கூட முழங்காமல்
உள்ளுக்குள் ஊனமாகிப் போன
       ஏழையின் மௌன மொழிகள்...!

மனதின் அழகினை
       மௌனாமாய் மனிதத்திற்க்கு
உணர்த்துகின்ற உறைந்து போன
        உள்ளத்தின் ஊமைக்குரல்...!

Saturday, 18 August 2012

ஓவியம்

வானத்தின் நீலத்தில்
       வரையப்பட்ட வண்ண மலர்கள்...!

தென்றலின் சல சலப்பை
       சிதரிய நிறங்களில்
நினைவூட்டும் அசைவுகள்...!

வெண்மை நிற ஆடையில்
      ஓடுகின்ற வெள்ளோட்டம்...!

அமைதியான சூழலை
       அனுபவமாக்கும் ஆலயம்...!

எழுகின்ற திசையில்
        முகம் காட்டும் சூரியன்...!

ஒவ்வொன்றும் ஒப்பனையில்
        ஒன்றாய் கலந்து விட்ட
ஒய்யார ஓவியம்...!


Saturday, 11 August 2012

தேர் திருவிழா

தென்னையின் விளைவுகள்
        வீதியெங்கும் விதைக்கப் பட்டு
ஆலய மணிகளுடன்
        அலங்கறிக்க…!

வானவில்லின் வண்ணச்சிதறலும்
       மின்மினிப் பூச்சியின்
மினுமினுப்பும்
      அலங்கார விளக்காக…!

தெருவெங்கும் மனக்கின்ற
      மல்லிகைப் பூ மாலையும்
இறைவனுக்கு படைக்கின்ற
     வாசனை திரவியங்களும்...!

மகிழ்ச்சியில் சுவைக்கின்ற
      மாவிளக்கு மாவும்
மனையினை அலங்கரிக்கின்ற
      மாவிலை தோரணங்களும்...!

எரியூட்டப்பட்ட விளக்கு
       கிழக்கே வெளுக்கின்ற வானம்
விடியலின் அறிகுறியென
       ஆராவரிக்கின்ற
மனிதக் கூட்டம்…!

மின்னலும் இடியும்
     இணைந்த சத்தத்துடன்
இருண்ட ஊருக்குள்
     வளம் வருகிற
தெய்வ பவனி…!

Wednesday, 1 August 2012

வார்த்தை

பிறந்த குழந்தையின்
      பிழையான சங்கீதம்...!

பழகிய நாவில்
      தத்தையின் பிதற்றல்...!

காதுகளில் முனுமுனுக்கின்ற
       கதலர்களின் காந்தக் குரல்...!

பிரிந்த சேயை
       சேருகின்ற தாயின் சிதைகுரல்...!

வெற்றியின் சந்தோசத்தில்
        தழு தழுத்த நாவின்
தடுமாரிய சொற்க்கள்...!

தோல்வியில் தடம்மாறி
       ஆறுதல் கேட்டு
கனக்கின்ற கதைகள்...!

காரணமில்லாமல் சந்தோசப்படுகின்ற
       மனதின் மௌன மொழிகள்...!

வார்த்தையும் வனப்புதான்
       வழங்கப் படும் இடம் பார்த்து...!

Saturday, 7 July 2012

தியாகம்

எழுகின்ற சூரியன்
       துணை கேட்டு
சமர்ப்பனம் செய்யும்
       பனித்துளி...!

விழிகளில் விழுகின்ற
       கண்ணீரினை துடைக்கின்ற
துணைக்காக
       வாழ்கின்ற வாழ்வு...!

காதலெனும் கனவுகளில்
       கருகிவிட்ட
விட்டில் பூச்சி...!

தாய் மண்ணினை காக்க
       மரனத்தை மனக்கவும்
மயங்குகின்ற மனிதம்...!