Saturday, 11 August 2012

தேர் திருவிழா

தென்னையின் விளைவுகள்
        வீதியெங்கும் விதைக்கப் பட்டு
ஆலய மணிகளுடன்
        அலங்கறிக்க…!

வானவில்லின் வண்ணச்சிதறலும்
       மின்மினிப் பூச்சியின்
மினுமினுப்பும்
      அலங்கார விளக்காக…!

தெருவெங்கும் மனக்கின்ற
      மல்லிகைப் பூ மாலையும்
இறைவனுக்கு படைக்கின்ற
     வாசனை திரவியங்களும்...!

மகிழ்ச்சியில் சுவைக்கின்ற
      மாவிளக்கு மாவும்
மனையினை அலங்கரிக்கின்ற
      மாவிலை தோரணங்களும்...!

எரியூட்டப்பட்ட விளக்கு
       கிழக்கே வெளுக்கின்ற வானம்
விடியலின் அறிகுறியென
       ஆராவரிக்கின்ற
மனிதக் கூட்டம்…!

மின்னலும் இடியும்
     இணைந்த சத்தத்துடன்
இருண்ட ஊருக்குள்
     வளம் வருகிற
தெய்வ பவனி…!

Wednesday, 1 August 2012

வார்த்தை

பிறந்த குழந்தையின்
      பிழையான சங்கீதம்...!

பழகிய நாவில்
      தத்தையின் பிதற்றல்...!

காதுகளில் முனுமுனுக்கின்ற
       கதலர்களின் காந்தக் குரல்...!

பிரிந்த சேயை
       சேருகின்ற தாயின் சிதைகுரல்...!

வெற்றியின் சந்தோசத்தில்
        தழு தழுத்த நாவின்
தடுமாரிய சொற்க்கள்...!

தோல்வியில் தடம்மாறி
       ஆறுதல் கேட்டு
கனக்கின்ற கதைகள்...!

காரணமில்லாமல் சந்தோசப்படுகின்ற
       மனதின் மௌன மொழிகள்...!

வார்த்தையும் வனப்புதான்
       வழங்கப் படும் இடம் பார்த்து...!

Saturday, 7 July 2012

தியாகம்

எழுகின்ற சூரியன்
       துணை கேட்டு
சமர்ப்பனம் செய்யும்
       பனித்துளி...!

விழிகளில் விழுகின்ற
       கண்ணீரினை துடைக்கின்ற
துணைக்காக
       வாழ்கின்ற வாழ்வு...!

காதலெனும் கனவுகளில்
       கருகிவிட்ட
விட்டில் பூச்சி...!

தாய் மண்ணினை காக்க
       மரனத்தை மனக்கவும்
மயங்குகின்ற மனிதம்...!

Saturday, 30 June 2012

மாலை

பிறை நிலவு
      பிறந்த நேரம்
அதன் அழகு
    முகத்தை மறைக்க
நினைக்கின்ற மேகம்...!

ஜோடிப் புறா 
     வானமே தன் வசமெனப்
பறக்கின்ற பரபரப்பு...!

வெயிலின் வாட்டத்தின்
     வதை பாடு முடிந்ததென
தலையசைத்து கொண்டாடுகின்ற
      இலைத்துளிகலும்
துன்ப முடிவினை
      தூது கொண்டுவரும் தென்றல் காற்றும்...!

அன்பு மொழியினை
      பேசுகின்ற ஆலய ஓசைகளும்
அர்த்தமற்ற புறாக்களின்
      கீச்சுக் குரல்களும்
அழகான மாலையை
     அலங்கறிப்பதாய்...!

Sunday, 24 June 2012

தவறுதல்

அன்பு
      ஆயுதம் அல்ல
அழிப்பதற்க்கு...!

அறிவு
      காகிதம் அல்ல
கிழித்தெரிய...!

பாசம்
      பாசறை அல்ல
காயப் படுத்திக் கொள்ள...!

நாட்கள்
        நரகம் அல்ல
நகர்த்திச் செல்ல...!

உண்மை
        உறவுகள் உருவாவதில்லை
உண்மையாக இல்லாத வரை...!

இவைகளில்
         தடுமாறும் போது
வாழ்வு தடம் மாறுவது
          தவிர்க்க இயலாததே...!