Saturday, 5 May 2012

கோடை

எழுகின்ற சூரியனின்
          இருமாப்பில் வீசுகின்ற தென்றலில்
ஏற்ப்பட்டுப்போன வறுமை...!


எற்றுக்கொண்ட தாகத்தை
        இறக்கிவைக்க
இழந்துவிட்ட பசுமை...!


வறண்டு போன
        பூமியில் வாசனை
தேடுகின்ற வண்ணத்துப் பூச்சி...!


கண்ணிமைக்கும் நேரத்தில்
       கொட்டிவிட்டு செல்கின்ற
மழைத்துளியும்
       மண்ணை தொட்டவுடன்
தொடங்கி வைக்கின்ற
        மண்வாசனையும்...!

Sunday, 22 April 2012

வானம்

தூசுத் துகள்களின்
        தஞ்சம் நீ உந்தன்
கண்ணீர்த் துளீயில்
        தழைக்கின்ற தரணி...!

மேகத்துக்குள்
        முகம் மறைக்கும்
வெண்ணிலவின்
          நானத்தின்
திரைச் சீலை நீ...!

மனித இனம்
          உடுத்தியிருக்கின்ற
உணரமுடியா உடையும் நீ
          கதிர் வீச்சு எனும்
கரையானில் எங்கள்
           வாழ்வு கரையாமலிருக்க...!

Saturday, 14 April 2012

மனிதன் மாறிவிட்டான்

காடுகளிள் அலைந்து
           திரிந்த மானுடம்
நாகரிக மேடையிலேறி
           நச்சினை விழுங்கிய
நாகப் பாம்பாய்
           ஒருவரை ஒருவர்
கடித்து கொண்டு
            மாண்டு போவதால்
மனிதன் மாறிவிட்டான்...!

அன்பெனும் ஆன்ற
            பெருமை கொன்று
ஆசையெனும்
            ஆயுதம் ஏந்தி
அச்சுருத்த வழ்ந்திருப்பதால்
            மனிதன் மாறிவிட்டான்...!

பரிவு என்னும்
             பாசவலை அறுத்து
பணமெனும்
            உயிற்ற பிணத்தை போற்றுவதால்
மனிதன் மாறிவிட்டன்...!

திறமை என்னும்
           தரத்தை மறந்து
தகுதி என்னும்
           தச்சனை தேவைப்படுவதால்
மனிதன் மாறிவிட்டன்...!

Saturday, 7 April 2012

குழந்தை

மெல்ல தலைசைத்து
        சிரிக்கின்ற குறையில்லா
முழுமதியின் முகம்...!

மனித மன அழுக்குகளை
       ஏற்றுக்கொள்ளாத
பொன் சிரிப்பு...!

தோல்வியை தொடக்கமாக்கும்
       துவளாத இதயத் துடிப்பு...!

கண்களிள் கலங்கமில்லா
      கதை பேசும் கற்பனைகள்...!

இமயத்தைக் கண்டாலும்
        இயல்பில் மாறாத
இமைகளின் துடிப்புகள்...!

துவர்ப்பினை உணராத
        மனிதத்தின்
தூய்மையான துவக்கம்..!

Saturday, 31 March 2012

தென்றல்

தென்றலின் வருடல்
    தாய் மடியின் புரலல் போல்
தடம் புரியாமல்
    பெறப்பட்ட சுகம்...!

உன் தழுவலில்
    மனத்தின் தனங்கள்
தணியும் மருத்துவம்
    எங்கு கற்றாயோ...!

நீ தழுவி வந்த
    சுகந்தங்களின் வாசனை
எந்தன் மேலும் உந்தன்
        வருடலின் அடையாலமாய்...!

நீ திரிகின்ற திசையெலாம்
    சுற்றித்திரிய ஆசை
நலிந்துவிட்ட சாபத்தில் உந்தன்
    வருடல் மட்டும் வரமாய்...!