Friday, 17 February 2012

முதிர் கன்னி

வயதின் முதிர்வாலும்
       வருமையின் வளத்தாலும்
விழிகளின் விளிம்பினில்
      வழிகின்ற கண்ணீரில்
கரைகின்ற அவளுடைய
      நம்பிக்கை.....


Wednesday, 15 February 2012

ராணுவம்

கல்லினுல் ஊர்ந்தாய் எங்கள்
      கண்களில் கண்ணீர் துளி
கலங்காமலிருக்க...!

மலை முகடுகளில்
      சுற்றித்திறிந்தாய் எங்கள்
சுதந்திரம் பறிபோகாமலிருக்க...!

கடும் வெயிலிலும் குளிரிலும்
      தவமிருந்தாய் நம்
தடங்களை காப்பற்றி க் கொள்ள ...!

தாய் மண்ணைக் காக்க
      உயிர் துறந்தாய் மண்ணின்
தரமான படைப்பென்று... !

Saturday, 11 February 2012

சகுணம்

விடியும் வேலையில்
      விண்மீன் தரையிரங்கியது
வெற்றியின் பாதையில் அவனை
      வழி நடத்த...!

காலைக் கதிரவன்
      கனிவுடன் நிரப்பியது அவன்
இழந்திருந்த ஆற்றலை...!

விடிகின்ற வேலையில்
      சேவல் கொக்கரித்தது
வெற்றியின் இரகசியத்தை...!

ஆலயமணி ஒளித்தது
      வாழ்வின் உண்மையான
பாதையின் துவக்கமென்று...!

இயற்கை இயல்பாய்
      வாழ்த்தியது அவன்
வழ்வை இயல்பாய் வாழச்சொல்லி...!

Friday, 3 February 2012

ஏழையின் கனவு

வாழுகின்ற வாழ்வை
     வண்ணமயமாக்க நினைத்து...!
ஓடுகின்ற தென்றலில்
     ஒளிந்து கொள்ள ஆசைப்பட்டு...!

மலைமுகட்டில் முட்டி
    முடமாகிப் போனவனின்
ஆசைகளின் எச்சமாய் - இந்த
     ஏழையின் கனவு...!

Saturday, 28 January 2012

எழுதல்

தோல்வியில் துவளாதே
      லேசரென நினைத்துக்கொள்
தடைகளில் தடுக்கப்பட்டு
      தரிகெட்டுப் போனாலும்...!

தன்னம்பிக்கையில் எழுந்து
     இலக்கினை நோக்க - அது
தன்னையே அற்ப்பனித்துவிடும்
      உன்னால் உணரமுடியா - அந்த
அசரீரி சக்திக்கு...!