Tuesday, 6 October 2015

மருந்து

விடியும் முன்னே
      ஏற்றிவைத்த தீபங்களாய்
அந் நட்சத்திரக்
     கூட்டம்...!

காலைக் கதிரவனின்
     கதகதப்பில்
மறைந்து போகும்
     பனித் துளிகள்...!

மேகம் கறுக்கு
    முன்னே
தோகை விரித்த
     மயில்...!

துலாபாரத்தில்
    வீற்றிருந்தும்
விடாமல் புன்னகைத்த
    சிறுமி...!

தோற்றம் தாண்டி   
     தோள் கொடுக்கும்
தோழனும் - அங்கே
     உயிர் காக்க
ஏழை கொடுத்துவிட்ட
    ஒரு குவளை
தண்ணீரும்...!

Sunday, 6 September 2015

இயற்கை தந்த நம்பிக்கை

மின்னும் 
     வானிலை
மிதக்கும் 
    மேகங்கள்...!
   
நிசப்த 
    நிலம்
நீர் வழி 
    வந்ததில்
காற்று 
   சுமந்து வந்த
ஈரப்பதம்...!

பசுமை  
    ஆடை உடுத்திய
வயல் 
    வெளிகள்
கூடு தேடி 
   பறந்து சென்ற
வெண் புறாக்கள்...!

வெட்கத்தில் 
   பாதி முகம் 
காட்டும்
   பிறை நிலவு
மையிருட்டில்
     விளக்கேற்றுவதாய்
மேற்கே
   முளைத்திருந்த வெள்ளி்...!

இருள்
    கவர்ந்தும்
விடியல்
    வருமென
இயல்பாய்
    நெஞ்சுக்குள்
நிலைத்திருந்த
    நம்பிக்கை...!

Tuesday, 25 August 2015

சாலை வழி

வானவில்லின்
      வண்ணங்களை
வெட்டியெடுத்து
      வரைந்து விட்ட
ஓவியமாய் அச்
     சாலை வழி...!

பாதை எங்கிலும்
      வாழ்வின் வழிகாட்டும்
வள்ளுவன் வாக்கினை
      சுமந்து நிற்கும்
மரங்கள்...!

பரந்து விரிந்த
      மரக்கிளையில்
அங்கும் இங்குமாய்
      பறந்து திரிந்த
கிளிக் கூட்டமும்...!

சட்டென விழும்
      சூரியக் கதிரும்
முரிந்து போவதாய்- அக்
       குளத்து நீரின்
சல சலப்பு...!

ஓரமாய் ஓங்கி
    எழுந்த பின்னும்
கர்வம்
    எனக்கில்லை என
தலை குனிந்த
     மூங்கிலடி...!

நீங்காமல்  ஒலித்திருந்த
      இரண்டெழுத்து  மந்திரமும்
வலியவர்
      வயிறு நிறைய
இட்டு வைத்த
     வாழை இலையும்...!

Thursday, 30 July 2015

கண்ணீர் துளிகள்

எளிமையும்
       அழகு சேர்க்கும்
ஏழையின் கனவுகளும்
       ஏற்றம் பெறும்
என வாழச்
       சொன்னவரே
வாழ்ந்து
      முடித்தவரே...!

உந்தன்
     முகம் பார்த்து
மாணவர்களின்
     உள்ளம் கொண்ட
மகிழ்ச்சியே
     நீங்கள்
சூடிக் கொண்ட
     மணி மகுடம்...!

உங்கள்
      மனஎழுச்சியில்
எழுந்து நின்ற
      ஏவுகணைகளும்
கண் விழித்தே
      வலம்வரும்
விண்கலத்திற்கும்
       கருப்பு திரை
விரித்து
       நடத்தி விட்ட
அணு குண்டு
      சோதனைகளும்...!

நீங்கள்
     விட்டு சென்ற
அக்னியின் சிறகுகள்
     என்றென்றும் - எங்கள்
நம்பிக்கையின்
     ஆரம்பப் புள்ளியாய்...!

பல ஓளியிலிருந்து
      ஓரொளி நீங்கள்
சேர்த்து வைத்த
     பொக்கிஷம் - உங்கள்
ஓர் ஒளியால்
     தூண்டப்பட்ட
உணர்வுகளிலே இங்கு
      நாங்கள்...!

இன்று நாடே
       சிந்துகின்ற
கண்ணீர் துளிகள்
       கூறும் - நீங்கள்
பாரதத்தை
      அலங்கரித்த
உண்மையான
      தலை மகனென்று...!

எங்கு சென்றாலும்
       தாய் மொழியை
நெஞ்சில் சுமந்து
       நின்றவரே - உங்கள்
உடல் பிரிந்தாலும்...!

நீங்கள்
      விட்டு சென்ற
உணர்வுகள்
      இம்மண்ணின்
தரமான
      நினைவுகளாய்
என்றென்றும்...!

Thursday, 2 July 2015

விடியும் வரை

நட்சத்திரங்களை
     கோர்த்து
சென்ற
      மின்னல் கீற்று...!

வட்டமிட்டு
      நான்கு திசையும்
பறந்து சென்ற
      வெண் புறாக்கள்...!

மெல்ல மெல்ல
      வீசிய காற்றினில்
மிதந்து வந்த
       மெல்லிசை...!

உருகும் பனி
        உரு கொடுக்க
புன்னகைக்கின்ற
        புதுப் பூக்கள்...!

இருள் குடித்தும்
       ஒளி வீசத்
தொடங்கிய
       காலைக் கதிரவன்...!

விழுந்த பின்
       எழுந்தாலும்
இறகுக்கு
       வலுவூட்டி
பறக்கின்ற
       சிறு பறவை...!

Thursday, 28 May 2015

பற்றாக்குறை

அச்சடித்த
        காகிதங்களும்
அர்த்தமற்றுப்
       போகும்...!

ஆனையிட்ட
      அரசவையும்
தொலைந்ததுவிட்ட
      ஆயுதமாம்
கலப்பையினை
     தேடி ஓடும்...!

தோற்கடிப்பதில்
       இருக்கும்
சந்தோசம் அன்று
      நம்மில்
தொலைந்து போகும்
      என்றோ
தொலைத்துவிட்ட
      நிம்மதியின்
இரகசியம் தேடி...!

உடைமைகளும்
      ஊனமாகும்
உயிர் வாழச்
     சொல்லும்
உணவிற்கு
     வந்ததுவிட்ட
வறுமையால்...!

சேறு மிதிக்கும்
      சமூகத்திற்கும்
கூட்டம் கூடும்
      உலக வாழ்வின்
உண்மையான
      சேவகர்கள்
என்று சொல்லி...!

Saturday, 9 May 2015

அழகு

மலை முகடுகளில்
      உலவுகின்ற
முழு நிலவு...!

பனியினை
     மெல்ல மெல்ல
கரைத்துக்
     கொண்டிருந்த
தென்றல்...!

தென்னையில்
     வாழ்திருந்து
விழுகையில்
     தோகை விரித்த
மயில்...!

விடியலை
     கொஞ்சம் கொஞ்சமாய்
விழுங்கிக்
     கொண்டிருந்த
மை இருட்டு...!

முகம்
      பார்க்கும் முன்னே
சேயினை முழுதாய்
      நேசிக்கின்ற
தாய் மனம்...!

பிழையே ஆனாலும்
      மழலையின்
மழுங்கிய
   முதல் உச்சரிப்பு...!

Thursday, 16 April 2015

கர்வம்

மழலை தொடங்கி
     மடியும் வரை
மனிதம் மறக்காமல்
     சேர்த்து வைக்கும்
ஒற்றை எதிர்மறை...!

நிழல்களில்
    தெரிவதில்லை ஆனாலும்
நிஜத்தினில்
    நெருடுகின்ற
நினைவுகளின்
    முதற் புள்ளி...!

இது
     தொலைந்து போகையில்
தொடர்வதும்
     தொடர்கையில்
தொலைவதுமாய் - நம்
    மன நிம்மதி...!

Wednesday, 18 March 2015

இழப்பு

நட்சத்திர ஒளித்
     துகள்கள் தூவிய
மழையினிலே
     நனைகின்ற பூமி...!

அலைகடல் அள்ளிக்
      கொண்டுவந்து
வீசிய சாரலில்
       உருண்டு வந்த
வெண் சங்கு...!

அச்சப்பட்டு
      அனைத்தையும்
ஓட்டுக்குள்
      அடக்கிக் கொண்ட
ஆமை...!

ஆழத்தின் அளவில்
      அமைதி கொண்ட
கடலின்
      மையப் புள்ளி...!

சந்திரனும் தென்றலும்
       கை கோர்த்து
அள்ளிக் கொண்டுபோன
      மனித மனங்கள் ...!

Thursday, 19 February 2015

இனிமை

மரங்களின் வெறுமை
       வானத்தின் வெளுப்பு
இமை வருடிய காற்று
      முகம் காட்டா குயில்
கொண்டுவந்த கானம்
      நதிமகளின் தாலாட்டில்
மிதந்து வந்த
     புல்லாங்குழல் - அங்கும்
போட்டியிட்ட மூங்கில்
      உருவாக்கிய சங்கீதம்...!

மின்னலின் கீற்று
       தொட்டுச்சென்ற
மலை முகடு
       வீதியெங்கும்
ஒன்றிரண்டாய்
       விதைக்கப்பட்ட
மழைத்துளிகள்
        இலையுதிர் காலத்திலும்
உதிராத நினைவுகள்
       எடுத்துவந்த சந்தோசமாய்
விட்டு விட்டுப் பேசிய - அம்
        மழலையின் குரலினிமை...!

Thursday, 12 February 2015

கொடியும் சிறுவனும்

முகம் மறைக்கும்
    உறை பனி
காற்றில் மிதந்து வந்த
       மித மழைச் சாரல்
அங்கே
       நேசமும் தூய்மையும்
நிறைந்த சிறுவனின்
        நெஞ்சம் சுமந்திருந்த
மூவர்ணக்கொடி...!


மண்ணின் மரபுகளை
        நினைவுக்கு கொண்டுவரும்
முப்படையின் முழக்கம்
       முன் நிற்க
அன்னையின் அன்பினில்
      அசைந்தாடும்
பிள்ளையைப் போல்
      அசைந்திருந்த
மூவர்ணக்கொடி...!

கண்டிருந்த சிறுவனின்
       கண்களில் தாய்மண்ணின்
பெருமை கண்ட
      கர்வம் கொட்டி கிடக்க
அவன் கால்களிலோ
      அழுக்கான
மனங்கள் தரும்
     நெருக்கடியில்
நடக்காத தோரணை...!

Friday, 23 January 2015

இருள் ஒளி

மின்னலின் கீற்றினில்
      முகம் பார்க்கும்
மை இருட்டு - அங்கே
      மரம் சூடிக் கொண்ட
வீண் மீன்களாய்
      மின்மினிக் கூட்டம்...!

அச்சுருத்தும் ஆந்தையின்
       அலறல்கள்
இயற்கையின் படைப்பினில்
       அரக்க உருவம்
கொண்டுவரும்
       மாயத் தோற்றம்...!

ஆளுயர அய்யனாரது
       வாள் முனை- அங்கு
எற்றி வைத்த
       தீப ஒளியில் - எங்கள்
மன இருள்
       விலகுவதாய்
விழுந்திருந்த
        நம்பிக்கையின்
விழுதுகள்...!