Thursday, 30 July 2015

கண்ணீர் துளிகள்

எளிமையும்
       அழகு சேர்க்கும்
ஏழையின் கனவுகளும்
       ஏற்றம் பெறும்
என வாழச்
       சொன்னவரே
வாழ்ந்து
      முடித்தவரே...!

உந்தன்
     முகம் பார்த்து
மாணவர்களின்
     உள்ளம் கொண்ட
மகிழ்ச்சியே
     நீங்கள்
சூடிக் கொண்ட
     மணி மகுடம்...!

உங்கள்
      மனஎழுச்சியில்
எழுந்து நின்ற
      ஏவுகணைகளும்
கண் விழித்தே
      வலம்வரும்
விண்கலத்திற்கும்
       கருப்பு திரை
விரித்து
       நடத்தி விட்ட
அணு குண்டு
      சோதனைகளும்...!

நீங்கள்
     விட்டு சென்ற
அக்னியின் சிறகுகள்
     என்றென்றும் - எங்கள்
நம்பிக்கையின்
     ஆரம்பப் புள்ளியாய்...!

பல ஓளியிலிருந்து
      ஓரொளி நீங்கள்
சேர்த்து வைத்த
     பொக்கிஷம் - உங்கள்
ஓர் ஒளியால்
     தூண்டப்பட்ட
உணர்வுகளிலே இங்கு
      நாங்கள்...!

இன்று நாடே
       சிந்துகின்ற
கண்ணீர் துளிகள்
       கூறும் - நீங்கள்
பாரதத்தை
      அலங்கரித்த
உண்மையான
      தலை மகனென்று...!

எங்கு சென்றாலும்
       தாய் மொழியை
நெஞ்சில் சுமந்து
       நின்றவரே - உங்கள்
உடல் பிரிந்தாலும்...!

நீங்கள்
      விட்டு சென்ற
உணர்வுகள்
      இம்மண்ணின்
தரமான
      நினைவுகளாய்
என்றென்றும்...!

No comments: