Thursday, 2 July 2015

விடியும் வரை

நட்சத்திரங்களை
     கோர்த்து
சென்ற
      மின்னல் கீற்று...!

வட்டமிட்டு
      நான்கு திசையும்
பறந்து சென்ற
      வெண் புறாக்கள்...!

மெல்ல மெல்ல
      வீசிய காற்றினில்
மிதந்து வந்த
       மெல்லிசை...!

உருகும் பனி
        உரு கொடுக்க
புன்னகைக்கின்ற
        புதுப் பூக்கள்...!

இருள் குடித்தும்
       ஒளி வீசத்
தொடங்கிய
       காலைக் கதிரவன்...!

விழுந்த பின்
       எழுந்தாலும்
இறகுக்கு
       வலுவூட்டி
பறக்கின்ற
       சிறு பறவை...!

No comments: