Thursday, 28 May 2015

பற்றாக்குறை

அச்சடித்த
        காகிதங்களும்
அர்த்தமற்றுப்
       போகும்...!

ஆனையிட்ட
      அரசவையும்
தொலைந்ததுவிட்ட
      ஆயுதமாம்
கலப்பையினை
     தேடி ஓடும்...!

தோற்கடிப்பதில்
       இருக்கும்
சந்தோசம் அன்று
      நம்மில்
தொலைந்து போகும்
      என்றோ
தொலைத்துவிட்ட
      நிம்மதியின்
இரகசியம் தேடி...!

உடைமைகளும்
      ஊனமாகும்
உயிர் வாழச்
     சொல்லும்
உணவிற்கு
     வந்ததுவிட்ட
வறுமையால்...!

சேறு மிதிக்கும்
      சமூகத்திற்கும்
கூட்டம் கூடும்
      உலக வாழ்வின்
உண்மையான
      சேவகர்கள்
என்று சொல்லி...!

No comments: