Saturday, 9 May 2015

அழகு

மலை முகடுகளில்
      உலவுகின்ற
முழு நிலவு...!

பனியினை
     மெல்ல மெல்ல
கரைத்துக்
     கொண்டிருந்த
தென்றல்...!

தென்னையில்
     வாழ்திருந்து
விழுகையில்
     தோகை விரித்த
மயில்...!

விடியலை
     கொஞ்சம் கொஞ்சமாய்
விழுங்கிக்
     கொண்டிருந்த
மை இருட்டு...!

முகம்
      பார்க்கும் முன்னே
சேயினை முழுதாய்
      நேசிக்கின்ற
தாய் மனம்...!

பிழையே ஆனாலும்
      மழலையின்
மழுங்கிய
   முதல் உச்சரிப்பு...!

No comments: