நீண்டு நெடுந்திருந்த
தாழ்வாரம் அங்கே
செதுக்கிவைக்கப்பட்ட
- தமிழ்
வீரப் பரம்பரை...!
வழியெங்கும்
ஒலித்திருந்த
கீதை - அங்கும்
தாயவளின்
தோழியான
கிள்ளைகளின் கீச்சுக்குரல்...!
தண்ணீரில்
- மிதக்கின்ற
நிலவொளியில்
முகம் பார்க்கும்
வெண்
புறாக்கள்...!
பளிங்கிக்
கற்களிளே
பொரிக்கப் பட்ட
பிறைமுடி
சூடியவனும்
சக்தியாய் உருவானவளும்...!
எத்தனை
ஆண்டுகளோ
இத்தனை எழில்மிகு
சிற்பங்களின்
வர்ணனைக்கு...!
எத்தனை
மானுடமோ
உளியெனும்
ஆயுதத்தில் - இவ்
உலக அதிசயத்தை
உருவாக்கியது...!
No comments:
Post a Comment