Tuesday, 18 February 2014

தேர்தல் களம்

வலது கண்
     துடித்ததாம்
வெற்றி நமக்கென
    வலம் வந்த பாதையெங்கும்
வறுமையை
    விதைத்ததுவிட்டு...!

விதைக்காமல்
     அறுக்க நினைக்கும்
வணிகத்தை தாண்டியும்
     வளர்ந்து வருகிறது
வான் முழுவதும்
      நிறைந்து விட்ட
அதிர்வலைகள்...!

வானில் உதிக்கின்ற
      பகலவனையும்
துரத்து விண்மீனாய்
     காட்டிக் கொள்ள - எங்கோ
விட்டு விட்டு
     எறிகிற ஒளி விளக்கையும்
விடிவதற்குள்
    அணைத்துவிட...!


தேரினிலே பவனி
      இன்றும் - தேர்ந்தெடுத்தவன்
தெருவிலிருக்க -
      என்றோ  எங்கோ
தொலைத்துவிட்ட
      சமத்துவம் இன்று
சரித்திரப் பதிவுகளில்
      மட்டுமோ?...!

No comments: