வலது கண்
துடித்ததாம்
வெற்றி நமக்கென
வலம் வந்த பாதையெங்கும்
வறுமையை
விதைத்ததுவிட்டு...!
விதைக்காமல்
அறுக்க நினைக்கும்
வணிகத்தை தாண்டியும்
வளர்ந்து வருகிறது
வான் முழுவதும்
நிறைந்து விட்ட
அதிர்வலைகள்...!
வானில் உதிக்கின்ற
பகலவனையும்
துரத்து விண்மீனாய்
காட்டிக் கொள்ள - எங்கோ
விட்டு விட்டு
எறிகிற ஒளி விளக்கையும்
விடிவதற்குள்
அணைத்துவிட...!
தேரினிலே பவனி
இன்றும் - தேர்ந்தெடுத்தவன்
தெருவிலிருக்க -
என்றோ எங்கோ
தொலைத்துவிட்ட
சமத்துவம் இன்று
சரித்திரப் பதிவுகளில்
மட்டுமோ?...!
No comments:
Post a Comment