Saturday, 28 December 2013

புத்தாண்டு

வானம் தன்
      வர்ணனையை கூட்ட
பெற்றுக் கொண்டது
      பெண்மையின்
கண் இமையோரா
      மையினை...!

தென்றல் தன்
      தனலினை குறைக்க
சுமந்து கொண்ட
     ஈரப்பதம்...!


திங்கள் தன்
      முகப் பொலிவினை
ஏற்றிக் கொள்ள
      ஏற்றுக் கொண்ட
சுரிய வெளிச்சம்...!

நீர் தன்னில்
      நிலைக்க நினைத்த
தூய்மைக்கு
    துணை கொண்ட
மூலிகையின்
     தழுவல்...!

நெருப்பு தன்
      வெப்பம் தணிக்க
நிரப்பி விட்ட
     நீர்திவளைகள்...!

நிலம் தன்னை
      நிந்தித்தவரையும்
நேசிக்க கற்று கொண்ட
     நிலையான மௌனம்...!

புதிதாய் பிறக்கட்டும் நம்மில் இப் புத்தம் புது ஆண்டில்....

பூக்களிடம்
     பெற்றுக்கொண்ட
முக மலர்ச்சி...!

புத்தம் புது
      நீருற்றில் எடுத்திருந்த
புத்துணர்ச்சி...!

நல்லவையே நடக்குமென்ற
     நம்பிக்கையை  கூட்டுகின்ற
நணயத்தின் ஒரு பக்கம்...!

பிழை அறியா
      மழலையின் மனம் கானும்
சந்தோசம்...!

தன் பழமையை மட்டும்
     தோற்கடிக்க தயங்காமல்
ஏற்றுக் கொள்ளும்
     மாற்றங்கள்...!

முடிவில்லா ஏற்ற
      இறக்கங்கள் நம்மை
தொடர்ந்தாலும்
      தொலைக்காத நம்
முன்னேற்றப் பாதை...!

இனிய புத்தாண்டு நல்வழ்த்துகள்........

Tuesday, 24 December 2013

சேருமிடம்

மலர்களின் வாசனையை
     சுமந்து கொள்ளும்
மண்ணில் விழுகின்ற
      மழைத் துளி...!

பனி விழுந்த
       பின்னும் விடியாத
வானிலையில்
       வண்ணத்துப் பூச்சியின்
உடல் ஒட்டியிருந்த    
      மினுமினுப்பு...!

தென்றலின் தழுவளில்
       தனை மறந்து
இசை மீட்டும்    
       உதவாதென
விட்டு ஏறியப்பட்ட
       உடைந்து போன
 மூங்கில்...!

Saturday, 14 December 2013

கண்டெடுக்காத


அவன் கல்லறையின்
     மீதிருந்த ஒற்றை
ரோஜா கூறிற்று
     அவன் இறப்பின்
ரகசியத்தை...!

அவன் உறவுகளின்
      விழி வழியே
வழிந்திருந்த
       கண்ணீர் காட்டியது
அவன்
      கண்டெடுக்கா  அன்பின்
ஆழத்தை...!

உறவுகளின்
     வறையரையை விட
அன்பு உயர்ந்தது - அது
      கிடைக்குமிடம்
எதுவானாலும்..!

Wednesday, 11 December 2013

உலகம்

மென்மையான ஸ்பரிசமும்
      மெல்லிய சுவாசமும்
வாழுகின்ற போராட்டத்தில்
      சிதைந்து போகும்
சித்திரக் கூடம்...!

ஏற்ற இறக்கங்கள்
       எதுவானாலும்
சமத்துவத்தில்
       சரிந்து போகா
சோதனைச் சாலை...!

ஆணவங்கள் அழிந்துபோயி
      அன்பினில் மட்டும்
வாழுகின்ற
      வரம் தந்த
அன்னையின் ஆலயம்...!

சரித்திரங்களும்
      சாம்பலாகும்
சத்தியமும் சகதியில்
      நிருத்தப்படும்...!

இவ்வுலகம் மட்டும்
      கற்பனைக்கு எட்டாத
காலமாற்றத்தின்
      கலங்கரை விளக்காய்...!

Thursday, 5 December 2013

வறுமை

உதிர்ந்து விட்ட
     விண்மீண்களை
கோர்க்க வந்த
     மின்னல் ஒளி...!

ஊர் உறங்கும்
    வேளையிலும்
குடை பிடித்த
     கரு மேகம்...!

கண்ணிமை இமை
     தொட்டுச் சென்ற
குளிர் காற்று - அங்கும்
     கந்தல் உடை
அணிந்து வந்த
     சிறுவன்...!

காணுமிடமெங்கும்
      காற்று முழுவதும்
நிறைந்துவிட்ட
      கருணை - நம்
நெஞ்சில் நிலைத்து
      நிற்கா கொடுமை...!