மீதமான மின்னொளியில்
புதுமையின் துளிர்தளும்
புன்னகைக்கும் பூக்களை
சுமந்திருந்த
எல்லோரா ஓவியமாய் - இவ்
இளவேனிற் காலம்...!
மெருகேறியவன் மேனியின்
தக தககப்பில்
கொடுத்தவன் பரிக்க
வறண்டு போய்
தாகம் ஏற்றுக்கொள்ளும்
தவிப்பாய் - இக்
கோடை காலம்...!
கார் மேகத்தின்
கருணை - அதில்
விழுகின்ற கண்ணீரில்
கானகமும்
செழிக்கின்ற
கார் காலம்...!
பிரிவினை என்றாலும்
உலகத்தின் நியதியால்
சருகுகள் பிரிகின்ற
சத்தியத்தின்
சோதனையாய் - இவ்
இலையுதிர் காலம்...!
அருகிலிருக்கும்
அருகம் புல்லும்
முகம் மூடி
ஜொலிக்கின்ற
முன் பனிக் காலம்...!
முற்றத்தில்
வீற்றிருக்கும்
துளசியின்
தளிர்ச்சிக்கு
மென் பனி துவிய
பின் பனிக் காலம்...!
Saturday, 28 September 2013
Thursday, 26 September 2013
பிஞ்சுத் தடங்கள்
பிள்ளை
காலம்
கனிவானது
- இந்த
உயர்ந்துவிட்ட
கள்ளத் தனத்திற்கு...!
நெருங்கி
நின்ற
நெருப்பு
கூட
இருந்ததில்லை
பயமென - இப்
பதுங்கி
வாழவேண்டிய
பாசறைக்கு...!
சந்தோசம்
மட்டும்
ஏந்தி நின்ற
நடுக்கமில்லா
நட்பில்
ஊர் உறங்கும்
வேளையிலும்
உழைப்பினில்
உருவான
மரக்கூடு
கான
சென்ற ஞபாகம்...!
ஒவ்வொரு
நாளும்
உணர்வுகளில் தோன்றி
மறியும்
தேடலாய் - இப்
பிஞ்சுத் தடங்களின்
பதிவு
- என்
பாதை
வழி
சிதறிய முத்துக்களாய்...!
Friday, 13 September 2013
பட்டறிவு
வாழ்வு வாழக்
கற்றுக் கொடுக்கிறது
வலுவற்ற பகுதியினை
வலுவாக்க...!
ஏற்ற இறக்கங்களில்
இதய நரம்பின்
துடிப்பினில் தூண்டப்பட்ட
உற்ச்சாகமும்
உதவுகின்ற
சீிரமைப்பும்...!
மீண்டும் மீண்டும்
இது மீள்வினையே
மீளுகின்ற தன்மை
நம்மில்
நிலைக்கும் வரை...!
கற்றுக் கொடுக்கிறது
வலுவற்ற பகுதியினை
வலுவாக்க...!
ஏற்ற இறக்கங்களில்
இதய நரம்பின்
துடிப்பினில் தூண்டப்பட்ட
உற்ச்சாகமும்
உதவுகின்ற
சீிரமைப்பும்...!
மீண்டும் மீண்டும்
இது மீள்வினையே
மீளுகின்ற தன்மை
நம்மில்
நிலைக்கும் வரை...!
Wednesday, 11 September 2013
பறவைகள்
பொங்குகின்ற நீறூற்றில்
முகம் பார்க்கின்ற
வெண் புறா
வெடுக்கென நீர்
எடுத்துச் சென்ற
கருப்புருவம்...!
வில்லேந்தி ஓடிய
வேடன் - விடிகின்ற
வேளையில் கானம்
பாடி நின்ற குயில்...!
கூண்டுக்குள்ளே வைத்தாலும்
கொஞ்சு தமிழ்
பேசுகின்ற பிள்ளை
குறைவுடன் இருந்தாலும்
நிறைவினை எடுக்கின்ற
அன்னம்...!
விடியலை வரவேற்று
கொக்கரிக்கின்ற சேவல்
செவ்வானம்
சிவக்கின்ற வேலையில்
தோகை விரிக்கின்ற
மயில்...!
முகம் பார்க்கின்ற
வெண் புறா
வெடுக்கென நீர்
எடுத்துச் சென்ற
கருப்புருவம்...!
வில்லேந்தி ஓடிய
வேடன் - விடிகின்ற
வேளையில் கானம்
பாடி நின்ற குயில்...!
கூண்டுக்குள்ளே வைத்தாலும்
கொஞ்சு தமிழ்
பேசுகின்ற பிள்ளை
குறைவுடன் இருந்தாலும்
நிறைவினை எடுக்கின்ற
அன்னம்...!
விடியலை வரவேற்று
கொக்கரிக்கின்ற சேவல்
செவ்வானம்
சிவக்கின்ற வேலையில்
தோகை விரிக்கின்ற
மயில்...!
Thursday, 5 September 2013
ஆசான்
அன்னை என்ற
வார்த்தை சொல்ல
அடிமனத்தில்
விட்டு சென்ற
அன்பு மொழி
வார்த்தை...!
கரையில்லா ஆடை
கசங்காது
உடுத்தக் கற்றுக்
கொடுத்த
நடத்தை...!
ஏழு மாடி
கட்டிடம் இல்லாவிட்டாலும்
எழுந்து நின்ற
அரச மரத்தில்
எழுதி சென்ற
வீரனின்
வாள் முனையில்
ஓட்டியிருந்த நம்பிக்கை...!
தொடங்கிய வாழ்வின்
தொடக்கப் புள்ளி
எங்கள் ஸ்பரிசத்தில்
மண்ணின் உணர்வுகளை
விட்டு சென்ற
ஒற்றை அகல் விளக்கு...!
வார்த்தை சொல்ல
அடிமனத்தில்
விட்டு சென்ற
அன்பு மொழி
வார்த்தை...!
கரையில்லா ஆடை
கசங்காது
உடுத்தக் கற்றுக்
கொடுத்த
நடத்தை...!
ஏழு மாடி
கட்டிடம் இல்லாவிட்டாலும்
எழுந்து நின்ற
அரச மரத்தில்
எழுதி சென்ற
வீரனின்
வாள் முனையில்
ஓட்டியிருந்த நம்பிக்கை...!
தொடங்கிய வாழ்வின்
தொடக்கப் புள்ளி
எங்கள் ஸ்பரிசத்தில்
மண்ணின் உணர்வுகளை
விட்டு சென்ற
ஒற்றை அகல் விளக்கு...!
Subscribe to:
Comments (Atom)