உயிர் பாதி இழந்தாலும்
உறவுகள் வாழ
ஊருக்கு வெளியே
உதிரம் கரைத்தவனின்
உடல் மட்டும்
ஊர் வந்து சேர்ந்தது
மண்ணின்
உடைமையென...!
வல்லுருவின்
வலிமையில்
அனுப்பி வைத்த
சவப் பெட்டிக்குள்
அடையாலம் காட்டிய
தாயின் துயர ரேகைகள்...!
கருணையில்லா
புகுந்த மண்ணும்
கண்டு கொள்ளா
பிறந்த மண்ணும்
நீதி கேட்காமல்
நிதியனுப்பியது - அவன்
அடக்க
சடங்கிற்க்கு...!
தினம் தினம் சரிகிற
சவப் பெட்டி குறையுமோ?
கொன்று குவித்த
கொடுமையையும்
ஆதாயமாக்குகிற
குறை மனதுடையவர்களால்...!
Friday, 29 March 2013
Saturday, 23 March 2013
கிழக்கே வெளுப்பு
மெல்ல மெல்ல
மேற்கே தரையிறங்கிய
விடி வெள்ளி...!
விட்டு விட்டு பொழிகின்ற
மென் பணிக்கு
மூடிய உடலின்
மெய் சிலிர்ப்பு...!
தவறுகள் தனதாலும்
ஏற்றுக் கொள்ளா
தண்டனைக்கு ஆள் தேடி
கண்ணில் உருத்துகின்ற
எரிபூச்சிகள்...!
தனலாய் எறிகின்ற
டீ கடை நெருப்பின்
உஷ்ணத்தில்
உணர்கின்ற சுகம்...!
வெள்ளை புரட்சியை
வளர்க்க வந்த ஜிவனின்
அன்னை அழைப்பும்
அடையாளம் காட்டியது - அந்த
கிழக்கு வெளுப்பினை...!
மேற்கே தரையிறங்கிய
விடி வெள்ளி...!
விட்டு விட்டு பொழிகின்ற
மென் பணிக்கு
மூடிய உடலின்
மெய் சிலிர்ப்பு...!
தவறுகள் தனதாலும்
ஏற்றுக் கொள்ளா
தண்டனைக்கு ஆள் தேடி
கண்ணில் உருத்துகின்ற
எரிபூச்சிகள்...!
தனலாய் எறிகின்ற
டீ கடை நெருப்பின்
உஷ்ணத்தில்
உணர்கின்ற சுகம்...!
வெள்ளை புரட்சியை
வளர்க்க வந்த ஜிவனின்
அன்னை அழைப்பும்
அடையாளம் காட்டியது - அந்த
கிழக்கு வெளுப்பினை...!
Thursday, 21 March 2013
சிறு புள்ளி
சொட்டுகின்ற
வியர்வைத் துளியில்
பெற்றுவிட்ட செல்வம் - அங்கே
குறைந்து போகா
உறவுகளின் நிம்மதி...!
தன்னம்பிக்கை உடனிருக்க
தடுமாற்றத்தினில்
சோரம் போகாத
மனித வாழ்வு ...!
துரத்த நினையா
துரத்த நினையா
மனிதனின் வெற்றியும்
துரத்தகின்ற
மனக் கனவில்
மறைந்து போகின்ற
மனக் கனவில்
மறைந்து போகின்ற
பயண மலைப்பும்...!
உலகத்தின் அளவில் - நீ
சிறு புள்ளியானாலும்
உறங்குவது நிம்மதியின்
சிறு புள்ளியானாலும்
உறங்குவது நிம்மதியின்
ஊஞ்சலாகட்டும்
பஞ்சனையில்
புழுங்குகின்ற மனதை விட...!
Saturday, 16 March 2013
வாக்குறுதி
வசந்தம் வரும்
வாழ்வு செழிக்கும் - என
சுளுரைத்து பெறப்பட்ட
கடவுச் சீட்டில்
பாமரனின்
சுருக்கு பையும்
களவாடப்பட்டது...!
வஞ்சகமோ இது
வாணிபமோ
நாமுண்ணும்
உணவு படைத்தும்
பசித்திருப்பவனை
மவுனமாய்
தூக்கிலிடுவது...!
வாழ்வு செழிக்கும் - என
சுளுரைத்து பெறப்பட்ட
கடவுச் சீட்டில்
பாமரனின்
சுருக்கு பையும்
களவாடப்பட்டது...!
வஞ்சகமோ இது
வாணிபமோ
நாமுண்ணும்
உணவு படைத்தும்
பசித்திருப்பவனை
மவுனமாய்
தூக்கிலிடுவது...!
Sunday, 10 March 2013
மலையருவி
மலையருவி மண்பார்க்கையில்
சிதறிய சில்லுகலாய்
நீர்த் திவலைகள்
அலங்கரித்திருந்த
அன்றலர்ந்த மலர்கள்...!
மூலிகைச் செடியில்
முகம் புதைத்து
மெல்ல மெல்ல
வருடிச் சென்ற காற்று...!
வான் மகளின்
பிரிவுதனில்
தண்ணீரின் தற்க்கொலை
முயற்சியை
தாங்கி பிடித்த
நில மகளின் தாய் மடி...!
நிஜமான வளமென
நீண்டுவிட்ட மரங்களும்
நிசப்த நிலத்தினை
நிலை குலைக்கின்ற
நீரோடையின்
சலசலப்பும்...!
காணுமிடமெல்லாம்
பசுமை நிறைந்திருக்க
கண்களுக்குள்
பதிந்துவிட்ட
கலையழகாய் - இப்
பூஞ்சோலை...!
சிதறிய சில்லுகலாய்
நீர்த் திவலைகள்
அலங்கரித்திருந்த
அன்றலர்ந்த மலர்கள்...!
மூலிகைச் செடியில்
முகம் புதைத்து
மெல்ல மெல்ல
வருடிச் சென்ற காற்று...!
வான் மகளின்
பிரிவுதனில்
தண்ணீரின் தற்க்கொலை
முயற்சியை
தாங்கி பிடித்த
நில மகளின் தாய் மடி...!
நிஜமான வளமென
நீண்டுவிட்ட மரங்களும்
நிசப்த நிலத்தினை
நிலை குலைக்கின்ற
நீரோடையின்
சலசலப்பும்...!
காணுமிடமெல்லாம்
பசுமை நிறைந்திருக்க
கண்களுக்குள்
பதிந்துவிட்ட
கலையழகாய் - இப்
பூஞ்சோலை...!
Friday, 1 March 2013
இளைஞ்சன்
நம்பியிருக்கிறது இளைஞ்சா
நம்பியிருக்கிறது
நாளைய பாரதம்
நம்பியிருக்கிறது - உன்னையே
நம்பியிருக்கிறது...!
சாதி என்பார்
சமயம் என்பார்
சரிந்துவிடாதே
சாக்கடைக்குள்
சரிந்துவிடாதே...!
சமத்துவம் என்னும்
சத்தியத்தில்
சரித்திரம் படைக்கும்
வல்லமை உனக்கிருக்க...!
சிறு மனதுடன்
கூட்டம் சேர்த்து
குவித்து வைக்கிற
பணமும் - அதில்
குற்றமற்றவரை
குற்றவாளியாக்கும்
ஆளுமையையும்
அழிந்து போகட்டும் - உன்னில்
அழிந்து போகட்டும்..!
அன்பு மட்டும்
விதையாகி
தனிமனித சுதந்திரத்தில்
திளைக்கின்ற
தரணி உனதாகட்டும்...!
நம்பியிருக்கிறது இளைஞ்சா
நம்பியிருக்கிறது
நாளைய பாரதம்
நம்பியிருக்கிறது - உன்னையே
நம்பியிருக்கிறது...!
நம்பியிருக்கிறது
நாளைய பாரதம்
நம்பியிருக்கிறது - உன்னையே
நம்பியிருக்கிறது...!
சாதி என்பார்
சமயம் என்பார்
சரிந்துவிடாதே
சாக்கடைக்குள்
சரிந்துவிடாதே...!
சமத்துவம் என்னும்
சத்தியத்தில்
சரித்திரம் படைக்கும்
வல்லமை உனக்கிருக்க...!
சிறு மனதுடன்
கூட்டம் சேர்த்து
குவித்து வைக்கிற
பணமும் - அதில்
குற்றமற்றவரை
குற்றவாளியாக்கும்
ஆளுமையையும்
அழிந்து போகட்டும் - உன்னில்
அழிந்து போகட்டும்..!
அன்பு மட்டும்
விதையாகி
தனிமனித சுதந்திரத்தில்
திளைக்கின்ற
தரணி உனதாகட்டும்...!
நம்பியிருக்கிறது இளைஞ்சா
நம்பியிருக்கிறது
நாளைய பாரதம்
நம்பியிருக்கிறது - உன்னையே
நம்பியிருக்கிறது...!
Subscribe to:
Comments (Atom)