Sunday, 30 September 2012

நடைபாதை மாற்றம்

கனவுகளை காண்கின்ற
       சிந்தனையின் சிறகுகள்...!

ஊரின் நினைவுகளை
       நிறைவேற்ற நினைக்காத நிஜம்...!

சிதைத்தாலும் கூண்டுக்குள்
       வாழ நினைக்காத
நிந்தனைகள்...!

மனதில் தோன்றுகின்ற
        பரிவினை மறுக்காத மனம்...!

அன்னையின் இதயத்துடிப்பில்
       ஒட்டிவந்த அன்பின்
ஆழ்மன உணர்வுகள்...!

தடுமாரிய தடங்களை
       தட்ச்சணையாய் ஏற்கின்ற
எதார்த்த எண்ணங்கள்...!

முன்னேற்றத்திற்க்கு முன்னே
       உருத்துப் போன
வியர்வைத் துளிகளை
       மறக்க நினைக்காத
நினைவுகளின் நிஜ ஓவியங்கள்...!

Saturday, 22 September 2012

கவிதை

உள்ளத்தில் உறைந்திருக்கும்
        கருப்பொருளை கல்லறையில்
சேர்க்காத கனவுகளின்
        காகிதக் கிறுக்கல்கள்...!

Friday, 21 September 2012

சொந்தம்

செத்துபோன சடலத்திற்கு
        சடங்கு செய்ய
உயிருள்ள ஜீவனை
        உதரித்தள்ள
உண்மை உணர்வுகளை
       விற்று விட்டு
நட்புடன் நடித்து பார்க்கும்
        நாகரிகக் கூட்டம்...!

பணமிருந்தால்
        பிணைந்துவிடும் பந்தம்
மனதை மட்டும் மறந்து விடும்
       மிடுப்புகளின் குழுமம்...!

உறுத்துகின்ற உறவுகளை
        உதறிவிட்டு - வாழ்வின்
வலிமையை கடக்க
        உடனிருக்கும் ஊண்களுக்காக
வாழ்கின்ற வாழ்வை
        சொந்தமாக்குங்கள் - இதன்
சுயத்தினை உணர்ந்து கொள்ள...!

Saturday, 15 September 2012

சந்தோசம்

கூண்டுக் கிளி
      கூண்டுகளை உடைத்தெறிந்த
சுதந்திரத்தின் சந்தோசம்...!

கூட்டுப்புழு
      உடலுக்குள் ஒட்டியிருந்த
இறகுகள் பிரித்து
      பறக்கையில் சந்தோசம்...!

அன்னையின் அடிவயிற்றில்
      சுமந்திருந்த பிள்ளையின்
தொப்புல் கொடி
     அறுவதும் சந்தோசம்...!

சுமந்தவளின் சந்தோசத்திற்க்காக
      சுமக்கின்ற சுமைகளின்
சஞ்சலங்களும் சந்தோசம்...!

மனிதத்திற்க்கு தன்னை
      வதைக்கின்ற கட்டுப் பாடுகளை
தகர்த்தெறிவதும் சந்தோசம்...!

இவையெல்லாம்
      வலியில் தொடங்கினாலும்
சந்தோசத்தின் வருகையை
      வரவேற்க்கின்ற சந்தோசம்...!

Saturday, 8 September 2012

வானவில்

வீசுகின்ற தென்றல்
        வீணையில் இசை மீட்டி
அதிருகின்ற அதிர்வைப் போல்
        மண் மீது மோதித் தெரிக்கின்ற
மழைத் துளிகள்...!

விட்டுவிட்டு பொழிகின்ற
       சாரல்கள் சரீரத்தில்
சருக்குகின்ற
       சங்கமத்தின் வருடல்கள்...!

அழகான மழைத்துளியின்
      அன்பான அர்ப்பணிப்பில்
திளைத்து விட்ட
      கதிரவனின் மெல்லிய
கதிர் வீச்சு...!

மோதிய மழைத் துளியில்
      சிதரிய சிற்ப்பங்களாய்
பகலவனின்
      கதிர் திரையில் தோன்றிய
வண்ணச் சிதறல்...!
 

Monday, 3 September 2012

மௌனம்

மாலையின் மௌனத்திற்க்கு
      மயங்கி முகம் காட்டும்
வெண்ணிலவு...!

புல்வெளியின் மௌனத்தில்
      புழுங்கிய மனதினிற்க்கு
ஆறுதல் தேடி அலைபாய்கின்ற
      ஈரக்காற்று...!

தடு மாறிய குரலில்
      பேசுகின்ற சிசுவின் மௌனத்தில்
முகம் சினுங்கும் தாயின்
      முகம்...!

அதிகார வர்க்கத்திடம்
       உரிமையை கூட முழங்காமல்
உள்ளுக்குள் ஊனமாகிப் போன
       ஏழையின் மௌன மொழிகள்...!

மனதின் அழகினை
       மௌனாமாய் மனிதத்திற்க்கு
உணர்த்துகின்ற உறைந்து போன
        உள்ளத்தின் ஊமைக்குரல்...!