Friday, 30 December 2011

விலைவாசி

பயணிக்கின்ற பேருந்தில் கூட
   மக்களின் பெருமூச்சி - இந்த
 நிலையற்ற அரசின்
     நெறியற்ற நிபந்தனைகளால்....

எரிகின்ற  எரிபொருலிள் கூட
       எரிக்கப்படுகின்றன அவர்களின்
சந்தோச நிமிடங்கள்.....

தொழில் துறையில்
      சாதிக்கத் துடிக்கும் உணர்வுகள்
நொறுக்கப்படுகின்றன   அந்த
     அந்நிய செலவாநிஎனும்
அச்சுறுத்தும் ஆலம் விழுதுகளால்...

ஆனால் - மனிதத்தை
     நிலை தடுமாற வைக்கும்
மயக்கங்கள் மட்டும்
     மகுடம் சூட்டப்படுகின்றன
கலி உலகினை நினைவுபடுதுவதாய்...

Saturday, 24 December 2011

முகாம்

உன்னில் ஒளிந்திருக்கும்
     உண்மை உணர்வுகளை
உணருகின்ற வாய்ப்பாய்......

கண்ணில் விழுகின்ற
    தூசிதனை துடைக்கின்ற
கருவறைப் பள்ளியாய்....

சிந்தனையின் சிறகினை
    சிற்ப்பிக்குள்ளே இருந்து
சிதைத்துவிட்ட சிற்பியாய்....

வானத்தின் வனப்பை
    வண்ணமுடன் காட்டி
வாழ்த்துகின்ற வள்ளலாய்.....

எரிகின்ற விளக்கின்
    திரிகளைத் தூண்ட
நினைக்கின்ற நிஜமாய்.....

Saturday, 17 December 2011

அறியாமை

 அறியாமை ஆனாலும் நம் சந்தோசத்தின் ஆதாரமாய்......

வண்ணத்துப் பூச்சியின்
       வண்ணத்தில் இரகசியமில்லையேல்
வியப்பில்லை அது நமக்கு....

தாலாட்டும் தென்றலின்
      திசை தெரிந்தால்
திகைப்பில்லை நமக்கு....

எங்கிருந்தோ வருகின்ற அந்த
     ஒற்றைப் பாடலின்
உள்ளிருப்பு சோகம்
      உணர்ந்திருந்தால் உணர்வுகள்
கிளர்வதில்லை...

இயங்குகின்ற இயந்திரம் நம்
       பாடலுக்கு இசையாகும்
இயல்பினை அறிந்திருந்தால்
       ஆச்சரியமில்லை அது நமக்கு...

மலர்களின் பிறப்பும்
      மாலையின் இறப்பும்
மங்கையின் வனப்பும்
     மலைமுகட்டின் செழிப்பும்
காரணம் அரியப்பட்டிருந்தால்
     நம் மனதுக்குள்
நாமறியாத அந்த
     துள்ளல் இல்லை...

Sunday, 4 December 2011

எத்தனை மனிதர்கள்

மரம் போன்று
     எல்லாத்தையும் எவருக்கும்
அளிப்பவர்கள்...

கொடி போல
     என்றும் அடுத்தவரை
சார்ந்திருப்பவர்கள்....

பூக்களைப் போல
     பூமியில் சிலநேரம் வாழ்ந்தாலும்
சிலிர்க்க வைப்பவர்கள்....

கற்கண்டு போல
     எந்நேரமும் இனிப்பானவர்கள்....

பாகற்க்காய் போல
     கசந்தாலும் உள்ளுக்குள்
வளர்ச்சிக்கு உரமிடுபவர்கள்.....

பலாவை போல்
     வெளிமுரட்டில்
உள்மிருதுவைக் கொண்டவர்கள்....

வாழையைப் போல
    வாழையடிவாழையாய் வாழவைத்து
வாழ்பவர்கள்.....

கானல் நீர் போல
      கற்பனையில் மிதப்பவர்கள்.....

இயற்க்கையைப் போல
      இயல்பில் மாறாதவர்கள்....

இப்படி எத்தனை
      எத்தனையோ மனிதம்
பூமியை அழகாக்கியும்
      அழிவுக்கு கொண்டு சென்றும்.......

Friday, 2 December 2011

விளையும்

ஆசை அழிவுக்கு
     இட்டு செல்லும்...

அறிவு அன்பைத்
     தேடி ஓடும்.....

உண்மை உறவுகளையும்
     பிரித்துப் பார்க்கும்.....

ஊமை உணர்வுகளை
     கட்டி வாழும்.....

கண்ணீர் கனவுகளைக்
     கரைத்து விடும்....

காதல் நிஜ உலகினையும்
     மறக்கச் செய்யும்.....

நட்பு நடக்கின்ற பாதையையும்
     நல்வழி படுத்தும்...
.