சாலையோரப் பூக்கள்
சங்கீதம் பாடிவந்த
மென் மழை சாரல்
மரக் கூடுகளில்
உணவூட்டிய
தாய்ப் பறவை
சர சரவென
சாலையை
கடந்து சென்ற
சாரைப் பாம்பு
பதற்றதில்
தடம் புரண்ட
இரு-சக்கர
வாகனம்...!
வீசிய காற்றின்
ஆற்றல் அங்கே
உயிர் கொடுக்க - அவன்
அரைகண் மட்டும்
விழித்திருக்க
வழி வந்தோர்
வாரி அனைத்து
வீதி வரை ஓடிவர
ஓலக் குடிசையெங்கும்
ஓலக் குரல்
நிறைந்துவிட
நிலை உணர்ந்தவன்
உதடுகள் உச்சரித்த
ஒற்றை வார்த்தையும்...!
பசியெடுத்து
உண்ணுகின்ற உணவு
உழைத்துவிட்ட
களைப்பினில்
உருவான நல்லுறக்கம்
உலவுகின்ற
உயிரனங்களை
உருத்தாத
மன நிம்மதி - இவைகளின்
சொந்தக்காரன்
வாழுகின்ற குடிலில்
வளந்திருந்த சந்தோசம்...!
Wednesday, 31 December 2014
Friday, 19 December 2014
பரிமாற்றம்
திகைக்கின்ற
திசையறியா பாதையிலும்
உறைகின்ற
பனியிலும்
துப்பாக்கி முன்னே
உயிர் துறந்தும்
உயிர் சுமப்பவளை
காத்து நிற்கும்
காவலர்கள்
ஒரு புறம்...!
கல்லறையின்
கனவு கண்டாலும்
தாய் மடி தேடும்
பிஞ்சுகளை
புதைக்குழுயிலிடும்
பாதையில்லா
பைத்தியக்காரர்கள்
மறு புறம்...!
தன் மக்களின்
உணர்வுகளின் வலியை
உரக்க கூறி நின்ற
தலைமகனின்
உருக்கக் குரல்
ஒறு புறம்...!
மகவுகளை இழந்தாலும்
நிகழ்வுகளின் உண்மையை
உணர்வதற்குள்
அடி மனத்தில்
பகையினில்
தீவைக்கின்ற
திட்டக் குழு
மறு புறம்...!
ஆயுதம் ஏந்திய
அரக்கர்களே
தேடுங்கள் புதுத்
தீவுத்திடலை
உங்களில் பெரியவரை
கண்டெடுக்கும்
போர்க்கலமாய்....!
தீய்மைக்கு தண்டனை
தீமையென்றால்
நீங்கள் திரும்பும்
திசையெங்கும்
தணல் காடாகும்
வரம் பெற்றவர்கள்...!
வாழ விடுங்கள்
வாழப் பிறந்தவர்களை...!
திசையறியா பாதையிலும்
உறைகின்ற
பனியிலும்
துப்பாக்கி முன்னே
உயிர் துறந்தும்
உயிர் சுமப்பவளை
காத்து நிற்கும்
காவலர்கள்
ஒரு புறம்...!
கல்லறையின்
கனவு கண்டாலும்
தாய் மடி தேடும்
பிஞ்சுகளை
புதைக்குழுயிலிடும்
பாதையில்லா
பைத்தியக்காரர்கள்
மறு புறம்...!
தன் மக்களின்
உணர்வுகளின் வலியை
உரக்க கூறி நின்ற
தலைமகனின்
உருக்கக் குரல்
ஒறு புறம்...!
மகவுகளை இழந்தாலும்
நிகழ்வுகளின் உண்மையை
உணர்வதற்குள்
அடி மனத்தில்
பகையினில்
தீவைக்கின்ற
திட்டக் குழு
மறு புறம்...!
ஆயுதம் ஏந்திய
அரக்கர்களே
தேடுங்கள் புதுத்
தீவுத்திடலை
உங்களில் பெரியவரை
கண்டெடுக்கும்
போர்க்கலமாய்....!
தீய்மைக்கு தண்டனை
தீமையென்றால்
நீங்கள் திரும்பும்
திசையெங்கும்
தணல் காடாகும்
வரம் பெற்றவர்கள்...!
வாழ விடுங்கள்
வாழப் பிறந்தவர்களை...!
Saturday, 15 November 2014
புதுத் தளிர்
வானவில்
விட்டு சென்ற
வண்ணங்களின்
சிதறல்களில்
உருகொண்டிருந்த
தாய் முகம்...!
நெடுந்தூரப்
பாதையில்
இரும்புப் பறவை
விட்டு சென்ற
வழித்தடம்...!
வானத்தின்
எல்லை வரை
பறந்துவிட
வட்டமிட்டு
பறந்திருந்த
வெண் பருந்து...!
வீசிய காற்றில்
திசையறியாது
திகைக்கின்ற
சிறுவனின்
காகிதப்
பறைவை...!
வலிமை
குறைந்தாலும்
உயிர் வாழ
ஒளியூட்டிக்
கொண்டிருந்த
பகலவன்...!
கருமேகங்கள்
கலைந்தாலும்
இரக்கத்தில்
பொழிந்துவிட்ட
மழைத்துளியில்
புத்துணர்வு
கொண்டிருந்த
புதுத் தளிர்...!
விட்டு சென்ற
வண்ணங்களின்
சிதறல்களில்
உருகொண்டிருந்த
தாய் முகம்...!
நெடுந்தூரப்
பாதையில்
இரும்புப் பறவை
விட்டு சென்ற
வழித்தடம்...!
வானத்தின்
எல்லை வரை
பறந்துவிட
வட்டமிட்டு
பறந்திருந்த
வெண் பருந்து...!
வீசிய காற்றில்
திசையறியாது
திகைக்கின்ற
சிறுவனின்
காகிதப்
பறைவை...!
வலிமை
குறைந்தாலும்
உயிர் வாழ
ஒளியூட்டிக்
கொண்டிருந்த
பகலவன்...!
கருமேகங்கள்
கலைந்தாலும்
இரக்கத்தில்
பொழிந்துவிட்ட
மழைத்துளியில்
புத்துணர்வு
கொண்டிருந்த
புதுத் தளிர்...!
Friday, 17 October 2014
கற்பனை
நிழலுக்கும்
நிஜத்திற்குமிடையில்
வளருகின்ற
விருச்சம்
இயல்புக்கும்
இச்சைக்குமிடையில்
தோன்றி மறையும்
கனவு...!
வரையறை தாண்டிய
வெள்ளப் பெருக்கு
ஆட்கொள்ளும்
இருளைப் போல் - இதன்
வளர்ச்சிக்கு
குறைவிருப்பதில்லை
விடிகின்ற வெளிச்சமும்
உணர்ந்துவிட்ட
உண்மை - நம்மை
விடுவிக்கும் வரை...!
கண்விழிக்கும்
சிறு குழுந்தையின்
அறியாமையானாளும்
அடைகின்ற
ஆனந்தத்தை போல் - இக்
கற்பனையின்
சிறகுகளுக்கு
வலிப்பதில்லை - அவ்
வான்முழுவதும்
விரிந்தபின்னும்...!
நிஜத்திற்குமிடையில்
வளருகின்ற
விருச்சம்
இயல்புக்கும்
இச்சைக்குமிடையில்
தோன்றி மறையும்
கனவு...!
வரையறை தாண்டிய
வெள்ளப் பெருக்கு
ஆட்கொள்ளும்
இருளைப் போல் - இதன்
வளர்ச்சிக்கு
குறைவிருப்பதில்லை
விடிகின்ற வெளிச்சமும்
உணர்ந்துவிட்ட
உண்மை - நம்மை
விடுவிக்கும் வரை...!
கண்விழிக்கும்
சிறு குழுந்தையின்
அறியாமையானாளும்
அடைகின்ற
ஆனந்தத்தை போல் - இக்
கற்பனையின்
சிறகுகளுக்கு
வலிப்பதில்லை - அவ்
வான்முழுவதும்
விரிந்தபின்னும்...!
Sunday, 12 October 2014
சிவாலயம்
மாவிலையில்
கட்டிவைத்த தோரணமும்
மாவிளக்கில்
ஏற்றிவவைத்த தீபமும் - அதில்
தீய்ந்துபோன
திரிகளின் வாடை
காற்றில்
மிதந்திருக்க...!
மஞ்சள் முக
நாயகியும் நாயகனும்
பொன்னிற ஆடையில்
பூமேடையில்
மனம் புரிய
அமர்ந்திருப்பதாய்
கட்டிவைத்த காட்சி...!
ஆலய மணியோசையும்
ஆராத்தியும்
ஒன்று சேர்ந்து
குலம் வாழச் சொல்லி
வணங்கி நிற்கும்
மனித இனம்...!
எரிந்த நெய்
விளக்குகள்
விட்டுச் சென்ற
சூழ்நிலையும்
திகைக்காத
நினைவலைக்குள்
சிக்கித் தவிக்கும்
மனங்களும் - திகைப்பில்
திவ்ய நிலைக்கு
சென்று வர - அன்றே
செதுக்கி வைத்த
செல்வமாய் - அச்
சிவாலயம்...!
கட்டிவைத்த தோரணமும்
மாவிளக்கில்
ஏற்றிவவைத்த தீபமும் - அதில்
தீய்ந்துபோன
திரிகளின் வாடை
காற்றில்
மிதந்திருக்க...!
மஞ்சள் முக
நாயகியும் நாயகனும்
பொன்னிற ஆடையில்
பூமேடையில்
மனம் புரிய
அமர்ந்திருப்பதாய்
கட்டிவைத்த காட்சி...!
ஆலய மணியோசையும்
ஆராத்தியும்
ஒன்று சேர்ந்து
குலம் வாழச் சொல்லி
வணங்கி நிற்கும்
மனித இனம்...!
எரிந்த நெய்
விளக்குகள்
விட்டுச் சென்ற
சூழ்நிலையும்
திகைக்காத
நினைவலைக்குள்
சிக்கித் தவிக்கும்
மனங்களும் - திகைப்பில்
திவ்ய நிலைக்கு
சென்று வர - அன்றே
செதுக்கி வைத்த
செல்வமாய் - அச்
சிவாலயம்...!
Subscribe to:
Posts (Atom)
