Friday, 22 July 2011

காவலன்

உண்மையான உழைப்பையும்
    உள்ளத்தின் உள்ளுணர்வுகளையும்
உணராதவனா தலைவன்
    இல்லை - அவன்
தன் முன்னேற்றத்திற்கு
    பலியிடப்பட்ட
உயிர்களின் இரகசியம் காக்கும்
    பிணக்காவலன்....


வரதட்சணைக் கொடுமை

பூவாய் பிறந்து
    புன்னகையில் பூத்தவள்
கண்ணகியாய்
       காத்திருந்தும்...!

வந்த சொந்தம்
        கருக வைக்க
வாரி இரைத்தது
       மண்ணெண்ணையோ...!



Thursday, 21 July 2011

நம்பிக்கை

கண்ணீருடன்
     நடந்த பாதையும் காவியமாகலாம்
கண்ணகியின்
     பாதச் சிலம்பு போல....


Friday, 15 July 2011

ஆதாரம்

தாயின் கருவறை
          நிசப்தம்....

என்னவென்று புரியாத
    மழலைப் பேச்சு...

திசை அரியா
    தென்றலின் தழுவல்.......

எங்கிருந்தோ வருகின்ற ஒற்றை
    பாடலின் உள்ளிருப்பு சோகம்....

என்றும் புன்னகையுடன்
    பூக்கின்ற பூக்கள்..

காதலனைக் கண்டவுடன்
    மேகத்திற்குள் முகம் மறைக்கும்
வெண்ணிலவின் நாணம்..

இவையெல்லாம் நம்
    சந்தோஷத்தின் ஆதாரமாக...


Thursday, 14 July 2011

முரண்பாடு

பாலையில் 
       நீர் கேட்டு
வளரத்துடிக்கும் 
      ஈச்சம்புதராய் அவன்...!

சிறிது 
     நேர தாகத்தை
தாங்கிக் கொள்ளா 
     மணிப்புறவாய் அவள்...!

சிதறவிட்ட
    உமிழ் நீரில் 
வாழ்கிறது சிலந்தி...!

சிதறவிட்ட
    சிந்தனையில் 
வீழ்கிறது மனிதம்...!

பூக்கின்ற 
     பூக்கள் கூட
பூமியை 
   அழகாக்கிப்  பார்க்கின்றன...!

புதைபடும் 
      மனிதம் நாம்
புதைமண்ணை 
      புரட்டிபோட்டு
புண்ணாக்குகிறோம்
     புதுப்பொருளை உருவாக்கும்
புதைதிருந்த
     பழம் பொருளைத் தேடிதேடி...!