வானவில்
விட்டு சென்ற
வண்ணங்களின்
சிதறல்களில்
உருகொண்டிருந்த
தாய் முகம்...!
நெடுந்தூரப்
பாதையில்
இரும்புப் பறவை
விட்டு சென்ற
வழித்தடம்...!
வானத்தின்
எல்லை வரை
பறந்துவிட
வட்டமிட்டு
பறந்திருந்த
வெண் பருந்து...!
வீசிய காற்றில்
திசையறியாது
திகைக்கின்ற
சிறுவனின்
காகிதப்
பறைவை...!
வலிமை
குறைந்தாலும்
உயிர் வாழ
ஒளியூட்டிக்
கொண்டிருந்த
பகலவன்...!
கருமேகங்கள்
கலைந்தாலும்
இரக்கத்தில்
பொழிந்துவிட்ட
மழைத்துளியில்
புத்துணர்வு
கொண்டிருந்த
புதுத் தளிர்...!
Saturday, 15 November 2014
Friday, 17 October 2014
கற்பனை
நிழலுக்கும்
நிஜத்திற்குமிடையில்
வளருகின்ற
விருச்சம்
இயல்புக்கும்
இச்சைக்குமிடையில்
தோன்றி மறையும்
கனவு...!
வரையறை தாண்டிய
வெள்ளப் பெருக்கு
ஆட்கொள்ளும்
இருளைப் போல் - இதன்
வளர்ச்சிக்கு
குறைவிருப்பதில்லை
விடிகின்ற வெளிச்சமும்
உணர்ந்துவிட்ட
உண்மை - நம்மை
விடுவிக்கும் வரை...!
கண்விழிக்கும்
சிறு குழுந்தையின்
அறியாமையானாளும்
அடைகின்ற
ஆனந்தத்தை போல் - இக்
கற்பனையின்
சிறகுகளுக்கு
வலிப்பதில்லை - அவ்
வான்முழுவதும்
விரிந்தபின்னும்...!
நிஜத்திற்குமிடையில்
வளருகின்ற
விருச்சம்
இயல்புக்கும்
இச்சைக்குமிடையில்
தோன்றி மறையும்
கனவு...!
வரையறை தாண்டிய
வெள்ளப் பெருக்கு
ஆட்கொள்ளும்
இருளைப் போல் - இதன்
வளர்ச்சிக்கு
குறைவிருப்பதில்லை
விடிகின்ற வெளிச்சமும்
உணர்ந்துவிட்ட
உண்மை - நம்மை
விடுவிக்கும் வரை...!
கண்விழிக்கும்
சிறு குழுந்தையின்
அறியாமையானாளும்
அடைகின்ற
ஆனந்தத்தை போல் - இக்
கற்பனையின்
சிறகுகளுக்கு
வலிப்பதில்லை - அவ்
வான்முழுவதும்
விரிந்தபின்னும்...!
Sunday, 12 October 2014
சிவாலயம்
மாவிலையில்
கட்டிவைத்த தோரணமும்
மாவிளக்கில்
ஏற்றிவவைத்த தீபமும் - அதில்
தீய்ந்துபோன
திரிகளின் வாடை
காற்றில்
மிதந்திருக்க...!
மஞ்சள் முக
நாயகியும் நாயகனும்
பொன்னிற ஆடையில்
பூமேடையில்
மனம் புரிய
அமர்ந்திருப்பதாய்
கட்டிவைத்த காட்சி...!
ஆலய மணியோசையும்
ஆராத்தியும்
ஒன்று சேர்ந்து
குலம் வாழச் சொல்லி
வணங்கி நிற்கும்
மனித இனம்...!
எரிந்த நெய்
விளக்குகள்
விட்டுச் சென்ற
சூழ்நிலையும்
திகைக்காத
நினைவலைக்குள்
சிக்கித் தவிக்கும்
மனங்களும் - திகைப்பில்
திவ்ய நிலைக்கு
சென்று வர - அன்றே
செதுக்கி வைத்த
செல்வமாய் - அச்
சிவாலயம்...!
கட்டிவைத்த தோரணமும்
மாவிளக்கில்
ஏற்றிவவைத்த தீபமும் - அதில்
தீய்ந்துபோன
திரிகளின் வாடை
காற்றில்
மிதந்திருக்க...!
மஞ்சள் முக
நாயகியும் நாயகனும்
பொன்னிற ஆடையில்
பூமேடையில்
மனம் புரிய
அமர்ந்திருப்பதாய்
கட்டிவைத்த காட்சி...!
ஆலய மணியோசையும்
ஆராத்தியும்
ஒன்று சேர்ந்து
குலம் வாழச் சொல்லி
வணங்கி நிற்கும்
மனித இனம்...!
எரிந்த நெய்
விளக்குகள்
விட்டுச் சென்ற
சூழ்நிலையும்
திகைக்காத
நினைவலைக்குள்
சிக்கித் தவிக்கும்
மனங்களும் - திகைப்பில்
திவ்ய நிலைக்கு
சென்று வர - அன்றே
செதுக்கி வைத்த
செல்வமாய் - அச்
சிவாலயம்...!
Wednesday, 17 September 2014
நேர்மறை
பனி மூடிய சூழ்நிலையில்
முழு முகம் காட்டிய
கதிரவனின்
கதிர் வீச்சு...!
மை இருட்டில்
மண் விளக்கில்
ஏற்றப்பட்ட
தீப ஒளி...!
அநீதியை கண்டு
நடுங்கி நின்ற
கூட்டத்திலிருந்தும்
கல்லெறிந்த
சிறுவனின்
மன எழுச்சி...!
உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசும்
உறவு
கொள்ளாமை…!
கடந்து வந்த
தவறுகளில் வாழக்
கற்றுக்கொண்ட
அறிவு...!
எறியப்பட்ட கற்கள்
வாழ்வின் படிகளாய்
மாறுகின்ற
வரம்...!
முழு முகம் காட்டிய
கதிரவனின்
கதிர் வீச்சு...!
மை இருட்டில்
மண் விளக்கில்
ஏற்றப்பட்ட
தீப ஒளி...!
அநீதியை கண்டு
நடுங்கி நின்ற
கூட்டத்திலிருந்தும்
கல்லெறிந்த
சிறுவனின்
மன எழுச்சி...!
உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசும்
உறவு
கொள்ளாமை…!
கடந்து வந்த
தவறுகளில் வாழக்
கற்றுக்கொண்ட
அறிவு...!
எறியப்பட்ட கற்கள்
வாழ்வின் படிகளாய்
மாறுகின்ற
வரம்...!
Sunday, 10 August 2014
இரயில் நிலையம்
நீல வானம்
நில மகளின்
மீது கொண்ட
காதலின் பரிமாற்றத்தில்
மழை அங்கே
வலுத்திருக்க...!
மித வேகத்து
மின் தொடர் வண்டி
குறுக்கிட்டதில்
முகம் நனைத்த
மழைச் சாரல்...!
முகத்தின்
பிரதி பிம்பத்தை
முத்துக்குள் சுமந்து
கொண்ட இலைகளும்
மௌனத்தின் அழகினை
முழுமையாய்
சூடிக் கொண்டிருந்த - அவ்
அந்தி வானம்...!
எடுக்க எடுக்க
குறையாத எண்ணங்களும்
அழித்தாலும் அடைந்தாலும்
தேய்ந்துபோகா ஆசைகளும்
கரைந்து போக
தோன்றிய தோற்றமாய் - அக்
காரிருள் பொழுது...!
நில மகளின்
மீது கொண்ட
காதலின் பரிமாற்றத்தில்
மழை அங்கே
வலுத்திருக்க...!
மித வேகத்து
மின் தொடர் வண்டி
குறுக்கிட்டதில்
முகம் நனைத்த
மழைச் சாரல்...!
முகத்தின்
பிரதி பிம்பத்தை
முத்துக்குள் சுமந்து
கொண்ட இலைகளும்
மௌனத்தின் அழகினை
முழுமையாய்
சூடிக் கொண்டிருந்த - அவ்
அந்தி வானம்...!
எடுக்க எடுக்க
குறையாத எண்ணங்களும்
அழித்தாலும் அடைந்தாலும்
தேய்ந்துபோகா ஆசைகளும்
கரைந்து போக
தோன்றிய தோற்றமாய் - அக்
காரிருள் பொழுது...!
Subscribe to:
Comments (Atom)
