Friday, 15 November 2013

ஆற்றுப்படுகை

ஆசையென்னும் கயிறு
      கொண்டு இழுத்து சென்ற
வென் புனல் - அதன்
      ஆணவத்தில்
விட்டு சென்ற - இதன்
       வளர்ச்சியென்னும்
வண்டல் மண்...!

எல்லையோரத்தில்
      எழுந்து நின்ற
ஆறு-கால் மண்டபம் - அங்கு
      அறைகுறையாய்
வரையப்பட்டிருந்த
      வள்ளுவரின் வரைபடம்...!

கரையெங்கும் வனப்பினை
      கூட்டியிருந்த
நீலப் பசும் பாசி - அங்கும்
      உதிர்ந்துவிட்ட சிறகென 
சிதைந்து கிடந்த
      சிறுவனின் அட்டைக் குடில்...!

கடந்து விட்ட
        மழை வெள்ளத்தில்
சிதிலம் சிதிலமென
      சிதைந்திருந்தும்
சிவன் சூடியிருக்கும்
       பிறை நிலவாய் - இவ்
ஆற்றுப்பதுகை...!

Monday, 11 November 2013

உறவுகளின் நெருக்கம்

உதடுகளில் உதிக்கின்ற
      சொற்களையும்
உள்ளத்தில் விரிகின்ற
     சுயத்தினையும்
குறைக்கின்ற துரமாய்
     இவ் உறவுகளின்
நெருக்கம்...!

தாங்கிய கரங்களை
       துளைக்காத
தடுமாறிய கால்களின்
      துணைக்கான
தோன்றலில் உணருகின்ற
     இவ் உறவுகளின்
நெருக்கம்...!

Wednesday, 6 November 2013

காவிரி டெல்டா

வற்றாத நதிமகளின்
       வளத்தினில் வளர்ந்திருந்த
நெற்கதிர்கள்
       வானுயர புல்லாங்குழலாய்
கானம் இசைத்திருந்த
       மூங்கில் தோட்டம்..!

துள்ளிக் குதித்தோடும்
       முயல் தூவிச்சென்ற
வர்ண ஜாலம்
        எட்டாத  குடைக்குள்ளே
கசிந்து வந்த
         வெண் மழைச் சாரல்...!

ஒண்டிக் கொள்ள
        குடிசையில்லாத துரத்தில்
அல்லி வீற்றிருந்த
         தாமரைக் குளம்...!

பாதிகால் நனையாது
       பாய்ந்திருந்த தண்ணீர் - அங்கே
பயந்து பயந்து
        நீந்திச் சென்ற
கெண்டை மீின்...!

பாதி வயிறு  நிறைய
      சேறு மிதிக்கின்ற
மனிதக் கூட்டம்
     அங்கேயும்
சோர்வு தெறியாமலிருக்க
      பாடி வந்த கானம்...!

Sunday, 27 October 2013

ஈர்ப்பு விசை

Gravity என்னும் படம் உண்டாக்கிய சிதறல்...

மண்ணில் வாழ்வதே
       சொர்க்கம் என்றது
விண்ணில் வாழ்ந்துவிட்ட
       வாழ்க்கையில்...!

இருக்க இடம் தேடி
      கொட்டிய கோடிகள்
போதுமென்றது
      இருப்பதே
அன்பினில் உருவான
      கருவறை
என்று சொல்லி...!

Saturday, 26 October 2013

மின்னல்

இமைக்கின்ற நொடிப்
      பொழுதில்
நிழல் விழுகின்ற
     தூரத்தில்...!

மண் கரைக்கும்
      மழை மேகம்
ஏற்றுக்கொண்ட
      மோதலுக்கு
எடுத்துவிட்ட நிழற்ப்பட
      ஒளியாய்...!