நேற்றுவரை
நடந்ததென்ன
நாடகமோ!
இன்று மட்டும்
நிஜமாக...!
காற்றினிலே
கரைந்து வந்த
காவியங்கள்
கற்பனையோ!
மனம் போகிற
போக்கினை
தேர்வு செய்ய...!
நடந்தவை
நடந்தவையே
பதிந்தவை
பதிந்தவையே
பாதை மாறாத
திடமிருக்கையில்...!
ஆரூடம் சொன்ன
பிள்ளை மொழி
பொய்த்ததுண்டு
அனுபவம்
பொய்த்ததில்லை...!
Monday, 22 July 2013
Thursday, 18 July 2013
முகவரியில்லா கடிதம்
கற்பனை.... நம்ம ஊரு அரசியல்வாதிக்கு....
மகுடமே சூட்டிக்
கொண்டாலும்
மரித்துவிட்ட ஜிவனின்
மரண தண்டனைக்கு
ஆயுள் கைதி...!
இப்படிக்கு,
மன சாட்சி.....
மகுடமே சூட்டிக்
கொண்டாலும்
மரித்துவிட்ட ஜிவனின்
மரண தண்டனைக்கு
நீ
- என்னிடம்
ஆயுள் கைதி...!
இப்படிக்கு,
மன சாட்சி.....
Saturday, 13 July 2013
முதியோர் இல்லம்
தன் இரத்த சதை
பிரிந்திருப்பினும்
தரமற்ற படைப்புகளால்
தனித்தெரியப்பட்ட
தடுமாற்றம்...!
வாழ்வின் சந்தோச
நிமிடங்கள்
வாழ வைப்பதில்
குறைந்திருப்பினும்
வழி தெரியா
வளர்ப்பினில் எற்பட்ட
வறுமை...!
தடுமாறிய வாழ்க்கையில்
முதுமை இங்கே
தடம் மாறிய
இளமையின் தவறுதலில்...!
பிரிந்திருப்பினும்
தரமற்ற படைப்புகளால்
தனித்தெரியப்பட்ட
தடுமாற்றம்...!
வாழ்வின் சந்தோச
நிமிடங்கள்
வாழ வைப்பதில்
குறைந்திருப்பினும்
வழி தெரியா
வளர்ப்பினில் எற்பட்ட
வறுமை...!
தடுமாறிய வாழ்க்கையில்
முதுமை இங்கே
தடம் மாறிய
இளமையின் தவறுதலில்...!
Sunday, 30 June 2013
நூற் பூங்கா
உடல் ஊனமானாலும்
உதிரத்தின் கரைப்பினில்
உருவாக்கிய உருவங்கள்
உறைந்து போன
மனங்களையும்
உலுக்கி வைக்க...!
ஆறாண்டு அடுக்கிவைத்த
அட்டைக்கல் கோபுரம் - அங்கு
அவிழ்ந்துவிடாமல்
சுற்றப்பட்ட நூல்களில்
கண்டெடுத்த பூஞ்சோலை...!
ஊனம் குறையில்லை
ஊருக்கு உரைத்து - அவர்
உதிரத்தில் உருமாறி
உலக சாதனையென
சரித்திரக் கால் பதிக்க - இந்த
நூற் பூங்கா...!
உதிரத்தின் கரைப்பினில்
உருவாக்கிய உருவங்கள்
உறைந்து போன
மனங்களையும்
உலுக்கி வைக்க...!
ஆறாண்டு அடுக்கிவைத்த
அட்டைக்கல் கோபுரம் - அங்கு
அவிழ்ந்துவிடாமல்
சுற்றப்பட்ட நூல்களில்
கண்டெடுத்த பூஞ்சோலை...!
ஊனம் குறையில்லை
ஊருக்கு உரைத்து - அவர்
உதிரத்தில் உருமாறி
உலக சாதனையென
சரித்திரக் கால் பதிக்க - இந்த
நூற் பூங்கா...!
Friday, 21 June 2013
மலை மேகம்
மென் பனிச் சாரல்
மேனி தொடும்
மேகம் - அங்கு
பனித் துளிகளை
சுமந்துநின்ற
பனை ஓலை...!
காலடி தெரியாத
சாரல் மழை
பாதி முகம்
காட்டி சிரித்த
பச்சிளங்
குழந்தை...!
அன்றே அறுவடை
செய்திருந்த
காய் கனிகள் - அங்கும்
ஆற்றுத் தண்ணீரின்
துவக்கத்திற்கு
அழுது கொண்டிருந்த
நிலமகள்...!
பசுமை எங்கும்
படர்ந்திருக்க
பார்க்குமிடமெல்லாம்
புன்னகை தாங்கிய
புதுப்
பூக்கள்...!
Subscribe to:
Comments (Atom)