Sunday, 30 June 2013

நூற் பூங்கா

உடல் ஊனமானாலும்
      உதிரத்தின் கரைப்பினில்
உருவாக்கிய உருவங்கள்
      உறைந்து போன
மனங்களையும்
      உலுக்கி வைக்க...!

ஆறாண்டு அடுக்கிவைத்த
      அட்டைக்கல் கோபுரம் - அங்கு
அவிழ்ந்துவிடாமல்
      சுற்றப்பட்ட நூல்களில்
கண்டெடுத்த பூஞ்சோலை...!


ஊனம் குறையில்லை
      ஊருக்கு உரைத்து - அவர்
உதிரத்தில் உருமாறி
      உலக சாதனையென
சரித்திரக் கால் பதிக்க - இந்த
      நூற் பூங்கா...!

No comments: