உடல் ஊனமானாலும்
உதிரத்தின் கரைப்பினில்
உருவாக்கிய உருவங்கள்
உறைந்து போன
மனங்களையும்
உலுக்கி வைக்க...!
ஆறாண்டு அடுக்கிவைத்த
அட்டைக்கல் கோபுரம் - அங்கு
அவிழ்ந்துவிடாமல்
சுற்றப்பட்ட நூல்களில்
கண்டெடுத்த பூஞ்சோலை...!
ஊனம் குறையில்லை
ஊருக்கு உரைத்து - அவர்
உதிரத்தில் உருமாறி
உலக சாதனையென
சரித்திரக் கால் பதிக்க - இந்த
நூற் பூங்கா...!
No comments:
Post a Comment