சில்லென்று சிதறிய
பனித்துளியில் முகம்
சிலிர்த்த
பனிப் பூக்கள்...!
நீர் திவளையில்
சிதறிய ஒளி - அதில்
வானத்தில் வரையப்பட்ட
ஓவியம்...!
ஊர் காவளுக்காக
காட்டுக்குள்ளே வைக்கப்பட்ட
அய்யனார் - அங்கு
எட்டு நான்கில்
எழுந்து நின்ற
வெண் குதிரை...!
வீதியெங்கும் விதைக்கப்பட்ட
வெள்ளைப் பூக்கள் - அங்கே
தோள்களின் வலிமையில்
வலம் வருகின்ற
எல்லைக் காவலன்...!

No comments:
Post a Comment