நெருப்பினில் வைத்து
நெருடிய விரல்களின்
வடுக்களில் வந்த
திருத்தங்கள்...!
தடுமாறி கீழே
விழுகையில்
சரீரத்தில் ஏற்பட்ட
திருத்தங்கள்...!
பலமாக வேண்டியவை
பலவீணமாகையில்
மனவலிமையில் உருவான
திருத்தங்கள்...!
சூழ்ந்து நின்ற
சுற்றமும் நட்பும்
சுத்திகரிக்கப்பட்டு - நம்
இயல்பில் உருமாறிய
திருத்தங்கள்...!
திருத்தங்கள்
தீர்வதில்லை
தினம் தினம் வருகிற
திகைப்புகள்
தீரும் வரை...!
No comments:
Post a Comment