Thursday, 20 June 2013

திருத்தங்கள்

நெருப்பினில் வைத்து
       நெருடிய விரல்களின்
வடுக்களில் வந்த
       திருத்தங்கள்...!

தடுமாறி கீழே
      விழுகையில்
சரீரத்தில் ஏற்பட்ட
      திருத்தங்கள்...!

பலமாக வேண்டியவை
       பலவீணமாகையில்
மனவலிமையில் உருவான
       திருத்தங்கள்...!

சூழ்ந்து நின்ற
       சுற்றமும் நட்பும்
சுத்திகரிக்கப்பட்டு -  நம்
       இயல்பில் உருமாறிய
திருத்தங்கள்...!

திருத்தங்கள்
        தீர்வதில்லை
தினம் தினம் வருகிற
        திகைப்புகள்
தீரும் வரை...!

No comments: