Friday, 21 June 2013

மலை மேகம்


மென் பனிச் சாரல்
     மேனி தொடும்
மேகம் - அங்கு
     பனித் துளிகளை
சுமந்துநின்ற
     பனை ஓலை...!

காலடி தெரியாத
     சாரல் மழை
பாதி முகம்
    காட்டி சிரித்த
பச்சிளங்
    குழந்தை...!

அன்றே அறுவடை
    செய்திருந்த
காய் கனிகள் - அங்கும்
    ஆற்றுத் தண்ணீரின்
துவக்கத்திற்கு
    அழுது கொண்டிருந்த
நிலமகள்...!


பசுமை எங்கும்
     படர்ந்திருக்க
பார்க்குமிடமெல்லாம்
     புன்னகை தாங்கிய
புதுப்
        பூக்கள்...!

No comments: