நேற்றுவரை
நடந்ததென்ன
நாடகமோ!
இன்று மட்டும்
நிஜமாக...!
காற்றினிலே
கரைந்து வந்த
காவியங்கள்
கற்பனையோ!
மனம் போகிற
போக்கினை
தேர்வு செய்ய...!
நடந்தவை
நடந்தவையே
பதிந்தவை
பதிந்தவையே
பாதை மாறாத
திடமிருக்கையில்...!
ஆரூடம் சொன்ன
பிள்ளை மொழி
பொய்த்ததுண்டு
அனுபவம்
பொய்த்ததில்லை...!
No comments:
Post a Comment