Wednesday, 31 July 2013

ஆனந்தம்

அனைகட்டிய ஆயிரங்கள் 
        எதிர்த்தாலும்
அரவணைக்கின்ற
       ஆருயிர்களின் அன்பினில்
அகப்படுகின்ற
       அசைவு...!

தாறுமாறாய் ஓடுகின்ற
        பாதையிலும்
தத்தை மொழி கேட்டு
       துள்ளுக்கின்ற
தசை நார்களின்
       தன்னிச்சை இயக்கம்...! 

கோள் இங்கு
       கோளமாக படைக்கப் பட்டது
கோடிட்ட கொடுமைகள்
       இல்லாது இருப்பதற்கோ
தடையில்லா
      இசை வெள்ளமாய்
தவழுகின்ற - இப்
      பிள்ளைக்  குணத்திற்க்கு...!

No comments: