அனைகட்டிய ஆயிரங்கள்
எதிர்த்தாலும்
அரவணைக்கின்ற
ஆருயிர்களின் அன்பினில்
அகப்படுகின்ற
அசைவு...!
தாறுமாறாய் ஓடுகின்ற
பாதையிலும்
தத்தை மொழி கேட்டு
துள்ளுக்கின்ற
தசை நார்களின்
தன்னிச்சை இயக்கம்...!
கோள் இங்கு
கோளமாக படைக்கப் பட்டது
கோடிட்ட கொடுமைகள்
இல்லாது இருப்பதற்கோ
தடையில்லா
இசை வெள்ளமாய்
தவழுகின்ற - இப்
பிள்ளைக் குணத்திற்க்கு...!
No comments:
Post a Comment