Sunday, 24 February 2013

வாழ்வே மாயம்

100  வது பதிவு

            எனது கல்லூரி பருவத்தில் "இளந்தூது" என்னும் கல்லூரி நாளிதழுக்கு நான் சமர்ப்பித்த "மனிதன் மாறிவிட்டான்" என்னும் தொகுப்பு வேறு ஒருவர் பெயரில் வெளியாகியது.

               5 வருடங்கள் சென்ற பின் தணிகைவேல் என்பவரின் மூலம் இந்த blogging  பற்றி அறிந்து கொண்டேன். உண்மையில் நம் மனம் விரும்பும் பாதையை எதிர் நோக்கிய செயல்பாடுகளில் நம் உள்மனம் எப்பொழுதும் விழிப்புடன் இருக்கும் என்பது உண்மையே.

              எனது பள்ளிப் பருவத்தில்  "வாழ்வே மாயம்" என்னும் தலைப்பில், முதல் முதலில் மேடையில் வாசிக்கப்பட்ட  வரிகள் இங்கே...

     *************************

வாழ்வே ஒரு மாயை - இதில்
        ஏனடா பல சோதனை
ஆசையும் ஒரு மாயை - அதில்
        அடைகிறோம் பல வேதனை...!

அன்பும் ஒரு மாயை - அங்குதான்
         பெறுகிறோம் நல்லுறவுகளை
கல்வியும் ஒரு மாயை - இங்கு
         கற்க்கிறோம் நல்லொழுக்கங்களை...!
  
அறிவியலும் ஒரு மாயை - இங்கே
           உணர்கிறோம் உலக அசைவுகளை
விஞ்சானமும் ஒரு மாயை - இவ்விடத்தில்
           போட்டியிட்டோம் இறைவனின் படைப்புகளை...!

எண்ணுவது நடப்பதில்லை
          நடப்பதை நினைப்பதில்லை
என்பதாலோ - இவ்
          வாழ்வே மாயம்...!


"தோல்வி நம்மை  தொட்டாலும் தொடர்ந்தது இல்லை என்றிருக்கட்டும்"
   ************************* 

Saturday, 23 February 2013

இருள் விளக்குப் பாதை

மண் குடிசை
       பாதி வேய்ந்த 
கூரை - அங்கு
      இரக்கத்துடன் 
இறங்கிவந்து
      ஒளி வீசிய 
 வெண் நிலவு...!

தன்னம்பிக்கை 
      வளர்க்க
தன்னையே 
     தற்கொலை
செய்கின்ற 
     திரிகள்...!

மகன் 
      சாதிப்பான்
மனக் 
      கனவுடன்
மண்டியிட்டு 
      தொழுகின்ற
  தாய்...!

இருள் 
      முழுவதும்
பரவிக் கிடந்த
       இலவசப் பொருட்கள்
முகம் மட்டும்
      அரசுயிட்ட 
சோதனையில்
       வியர்த்திருக்க
விடியல் வருமென
         வாசிக்கப்பட்ட நூல்கள்...!  

விடிந்த பின் 
      வீசிய
புயலெனும் பூதம்
        பெயர்த்தெடுத்த 
கூரையும்
        அரசு  அளித்த
ஆறு  ஐந்து நூறு
        நோட்டுகளும்...!

பாதி நாள்
        தந்தையுடன் 
பணிபுரிந்து
       வேய்ந்து  விட்ட
கூரையில்
       வினாவாகிய
அவன்
       இருள் விளக்குப் பாதை...!

Saturday, 16 February 2013

பயனற்றவை

ஆணி வேருடன்
        பிடுங்கி எறிந்து விட்டு
மரத்தில் நிழல் தேடும்
        மனிதமும்...!

கருவினில் சிசுவினை
        பறிகொடுத்த
தாயினை போல்
       கலங்கி நின்ற காற்றும்...!

விடைதெரியா வாழ்வில்
        விடை என
விட்டு விட்டு
        பொழிகின்ற வானிலையில்
விதைக்கப்பட்ட
         விதையும்...!

வளர்ச்சியென
         தன்னை மட்டும்
வளர்த்து குளத்தின்
        சூழலை மாசு படுத்தும்
நீலப் பசும் பாசியும்...!

பாதை முழுவதும்
       தெளிக்கப் பட்டாலும்
பயனற்றவையே...!

Friday, 15 February 2013

புன்னகை

எளிமையான வாழ்வினை
          நிரப்ப வந்த
எதார்த்த நண்பன்...!

மருந்துகள் அல்லாத
        மனித வாழ்விற்க்கான
மருத்துவம்...!

பூத்தம் புதிதாய்
        பூத்த பூவின்
மலர்ச்சியிடம் - போட்டியிட்ட
        மனிதத்தின்
ஒற்றை ஆயுதம்...!

Saturday, 2 February 2013

சுயநலம்

அரசு

   நாவிற்க்கு அடிபனியா     
           கருத்துக்கு கருத்தடை
   மன சாந்திக்கு
           மக்கள் கூட்டத்தின்
   குருதிப் புனல்...!

மக்கள்

   வந்தது நமக்கில்லை
         வன்மையை வசைபாட - என
   வாழத் தொடங்கினோம் - இன்று
         வருங்காலம் நமக்கில்லை
    நாணயத்தில்
         நசுக்கப்பட்ட நாயகன்கள்...!

நிலமை
 
   உலகமறியும் இந்தியனை
         இடம் பெயரச் சொல்லும்
   மாற்றம்  இந்த மண்ணில்
         மதத்தினை மதில் மேலேற்றி
   மனிதத்தை
         மண்ணுக்குள் புதைக்கின்ற
   சுய நலத்தின்
         சுடுகாடாய்...!