எனது கல்லூரி பருவத்தில் "இளந்தூது" என்னும் கல்லூரி நாளிதழுக்கு நான் சமர்ப்பித்த "மனிதன் மாறிவிட்டான்" என்னும் தொகுப்பு வேறு ஒருவர் பெயரில் வெளியாகியது.
5 வருடங்கள் சென்ற பின் தணிகைவேல் என்பவரின் மூலம் இந்த blogging பற்றி அறிந்து கொண்டேன். உண்மையில் நம் மனம் விரும்பும் பாதையை எதிர் நோக்கிய செயல்பாடுகளில் நம் உள்மனம் எப்பொழுதும் விழிப்புடன் இருக்கும் என்பது உண்மையே.
எனது பள்ளிப் பருவத்தில் "வாழ்வே மாயம்" என்னும் தலைப்பில், முதல் முதலில் மேடையில் வாசிக்கப்பட்ட வரிகள் இங்கே...
*************************
வாழ்வே ஒரு மாயை - இதில்
ஏனடா பல சோதனை
ஆசையும் ஒரு மாயை - அதில்
அடைகிறோம் பல வேதனை...!
அன்பும் ஒரு மாயை - அங்குதான்
பெறுகிறோம் நல்லுறவுகளை
கல்வியும் ஒரு மாயை - இங்கு
கற்க்கிறோம் நல்லொழுக்கங்களை...!
அறிவியலும் ஒரு மாயை - இங்கே
உணர்கிறோம் உலக அசைவுகளை
விஞ்சானமும் ஒரு மாயை - இவ்விடத்தில்
போட்டியிட்டோம் இறைவனின் படைப்புகளை...!
எண்ணுவது நடப்பதில்லை
நடப்பதை நினைப்பதில்லை
என்பதாலோ - இவ்
வாழ்வே மாயம்...!
"தோல்வி
நம்மை தொட்டாலும் தொடர்ந்தது இல்லை என்றிருக்கட்டும்"
*************************