Sunday, 18 November 2012

கஷ்ட காலம்

சுடு மணலின்
        சூட்டினில் நடந்தாலும்
சுத்தமான உறவுகளை
       சூழ்ந்து நிற்க்கின்ற 
நிமிடங்களாய்...!

 சந்தோசமற்ற சறுக்கல்களில்
       மனம் சறுக்கினாலும்
மனம் விரும்பும்
        உறவுகளை உணருகின்ற
உண்மை தினங்கள்...!

 தடுமாறுகின்ற தினங்களில்
        துணை நின்றாலும்
சந்தோசத்தில் விலகி நின்று
         நம் நினைவுகளை அலசுகின்ற
நிஜ உறவுகளின்
       அறிமுக தருணங்களாய் - இந்த
கஷ்ட காலம்...!

Tuesday, 13 November 2012

தீபம்


பூசி வைத்த இருட்டுக்குள்
       புதையாத புதையளாய்
வாள் கொண்டு போராடும்
       விரனின் வீரத்தின்
சூல் கொண்டு சுடுகின்ற
       இரவுச் சுரியனாய்...!


வளத்தில் வழிகின்ற குளம்
       தன்னையே வற்ற விட்டு
தியாகத்தின்  வேராக - அதில்
      வளர்க்கின்ற விருச்சமாய்
இந்த தீப ஒளி...!

Saturday, 3 November 2012

படியில் பயணம்

தொடர்வண்டியில் தொங்குகின்ற
      ஊஞ்சலாய் நீ - உன்னை
தொட்டிலிட்ட தேவதையின்
      உதிரம் உரைந்து
போகுமென்பதை உணராமல்...!

எதனை மயக்க
      இந்த மயக்கம்
மடியில் சுமந்தவளை
      மரணப் படுக்கைக்கு
கொண்டு செல்ல...!

அவள் செலவழித்த
       நிமிடங்களை
திருப்பித் தர நினைக்காத
      நினைவுதான் ஏனோ...!

பெற்றதனைத்தும்
      அவர்களின் கொடை
அற்ப்ப ஆசைகளுக்காக
     அந்தரத்தில் ஆடுகின்ற உயிரல்ல அது
கண்ணிமைக்குள் காத்து வந்த
     அவர்களின் கருவிழி...!

Saturday, 27 October 2012

இருமாப்பு

உறவுகள் இருக்கையில்
        இழக்க மறுத்து
இழந்தபின்
         நினைவுகளில் நெருடுகின்ற
நெறுஞ்சி முற்களாய் - இந்த
         இருமாப்பு...!

Saturday, 20 October 2012

காட்சி

தூரலை துணையாக்கி
      துயிலெழுந்த காலை - அங்கே
குளிரினில் கோபுரத்தில்
       உடல் குறுக்கி நின்ற புறாக்கள்...!

மின்சாரமில்லா அரங்கத்தை
      மிரட்டுகின்ற அமைதி - மீள்வினையாய்
மழைத் துளியின் சந்தத்தில்
      கலந்துவிட்ட ஆலய மணியோசை...!

இயந்திரத்தின் அசைவுகளில்
      தினம் தினம் அருந்துபோகும்
ஒலி உணர்  உறுப்புகளின்
       உன்னத ஓய்வு...!

வறச்சியினை நீக்க வந்த
      நீல வானம் நிந்திக்காமல்
நிலமகளை நனைத்தாலும்
       வீதியில் வளம்வரும்
மனிதத்தின் எண்ணிக்கையில்
       ஏற்ப்பட்டு போன வறச்சி...!

மொத்தத்தில் - நம்
      மனம் மயங்கும்
மௌனம் மட்டும்
      வீதியெங்கும்...!