மனிதம் வளைந்து
செல்லும் வளைவு நெளிவுகள்
மனம் மயங்குகின்ற
மனிதத்தின் மனப்படிவுகள்...!
மனித உணர்வுகளின்
தொடக்கப் புள்ளியும்
நாளை விடியும்
என்று எதிற்பார்க்கும்
இதயத்தின்
முதற் துடிப்பும்...!
இவ்விடை தெரியா
வினாக்களுக்கு
விடை தேடுகின்ற
தேடலாய் வாழ்வு...!
Saturday, 2 June 2012
Saturday, 19 May 2012
அன்னையர் தினம்
உந்தன் உதிரத்தில்
உருமாறியா உடல்...!
உந்தன் மூச்சிக்காற்றில்
சுவாசித்த எங்கள்
முதல் சுவாசம்...!
உந்தன் முகம் பார்க்க
முதலில் அசைந்த
எங்கள் கண் இமை...!
பசிப்பதற்கு முன்
பதறுகின்ற மனம்
அழுதவதற்குள் அள்ளி
அனைத்துக்கொள்ளும்
அன்பு உருவம்...!
நிஜ மனிதனாய்
நில உலகில்
நடமாட துடித்த
நாடித்துடிப்பினை
நினைக்கின்ற
நிஜதினமாய்...!
உருமாறியா உடல்...!
உந்தன் மூச்சிக்காற்றில்
சுவாசித்த எங்கள்
முதல் சுவாசம்...!
உந்தன் முகம் பார்க்க
முதலில் அசைந்த
எங்கள் கண் இமை...!
பசிப்பதற்கு முன்
பதறுகின்ற மனம்
அழுதவதற்குள் அள்ளி
அனைத்துக்கொள்ளும்
அன்பு உருவம்...!
நிஜ மனிதனாய்
நில உலகில்
நடமாட துடித்த
நாடித்துடிப்பினை
நினைக்கின்ற
நிஜதினமாய்...!
Saturday, 5 May 2012
கோடை
எழுகின்ற சூரியனின்
இருமாப்பில் வீசுகின்ற தென்றலில்
ஏற்ப்பட்டுப்போன வறுமை...!
எற்றுக்கொண்ட தாகத்தை
வறண்டு போன
பூமியில் வாசனை
தேடுகின்ற வண்ணத்துப் பூச்சி...!
கண்ணிமைக்கும் நேரத்தில்
கொட்டிவிட்டு செல்கின்ற
மழைத்துளியும்
மண்ணை தொட்டவுடன்
தொடங்கி வைக்கின்ற
மண்வாசனையும்...!
இருமாப்பில் வீசுகின்ற தென்றலில்
ஏற்ப்பட்டுப்போன வறுமை...!
எற்றுக்கொண்ட தாகத்தை
இறக்கிவைக்க
இழந்துவிட்ட பசுமை...!வறண்டு போன
பூமியில் வாசனை
தேடுகின்ற வண்ணத்துப் பூச்சி...!
கண்ணிமைக்கும் நேரத்தில்
கொட்டிவிட்டு செல்கின்ற
மழைத்துளியும்
மண்ணை தொட்டவுடன்
தொடங்கி வைக்கின்ற
மண்வாசனையும்...!
Sunday, 22 April 2012
வானம்
தூசுத் துகள்களின்
தஞ்சம் நீ உந்தன்
கண்ணீர்த் துளீயில்
தழைக்கின்ற தரணி...!
மேகத்துக்குள்
முகம் மறைக்கும்
வெண்ணிலவின்
நானத்தின்
திரைச் சீலை நீ...!
மனித இனம்
உடுத்தியிருக்கின்ற
உணரமுடியா உடையும் நீ
கதிர் வீச்சு எனும்
கரையானில் எங்கள்
வாழ்வு கரையாமலிருக்க...!
தஞ்சம் நீ உந்தன்
கண்ணீர்த் துளீயில்
தழைக்கின்ற தரணி...!
மேகத்துக்குள்
முகம் மறைக்கும்
வெண்ணிலவின்
நானத்தின்
திரைச் சீலை நீ...!
மனித இனம்
உடுத்தியிருக்கின்ற
உணரமுடியா உடையும் நீ
கதிர் வீச்சு எனும்
கரையானில் எங்கள்
வாழ்வு கரையாமலிருக்க...!
Saturday, 14 April 2012
மனிதன் மாறிவிட்டான்
காடுகளிள் அலைந்து
திரிந்த மானுடம்
நாகரிக மேடையிலேறி
நச்சினை விழுங்கிய
நாகப் பாம்பாய்
ஒருவரை ஒருவர்
கடித்து கொண்டு
மாண்டு போவதால்
மனிதன் மாறிவிட்டான்...!
அன்பெனும் ஆன்ற
பெருமை கொன்று
ஆசையெனும்
ஆயுதம் ஏந்தி
அச்சுருத்த வழ்ந்திருப்பதால்
மனிதன் மாறிவிட்டான்...!
பரிவு என்னும்
பாசவலை அறுத்து
பணமெனும்
உயிற்ற பிணத்தை போற்றுவதால்
மனிதன் மாறிவிட்டன்...!
திறமை என்னும்
தரத்தை மறந்து
தகுதி என்னும்
தச்சனை தேவைப்படுவதால்
மனிதன் மாறிவிட்டன்...!
திரிந்த மானுடம்
நாகரிக மேடையிலேறி
நச்சினை விழுங்கிய
நாகப் பாம்பாய்
ஒருவரை ஒருவர்
கடித்து கொண்டு
மாண்டு போவதால்
மனிதன் மாறிவிட்டான்...!
அன்பெனும் ஆன்ற
பெருமை கொன்று
ஆசையெனும்
ஆயுதம் ஏந்தி
அச்சுருத்த வழ்ந்திருப்பதால்
மனிதன் மாறிவிட்டான்...!
பரிவு என்னும்
பாசவலை அறுத்து
பணமெனும்
உயிற்ற பிணத்தை போற்றுவதால்
மனிதன் மாறிவிட்டன்...!
திறமை என்னும்
தரத்தை மறந்து
தகுதி என்னும்
தச்சனை தேவைப்படுவதால்
மனிதன் மாறிவிட்டன்...!
Subscribe to:
Posts (Atom)

