Saturday, 2 June 2012

வினாக்கள்

மனிதம் வளைந்து
         செல்லும் வளைவு நெளிவுகள்
மனம் மயங்குகின்ற
         மனிதத்தின் மனப்படிவுகள்...!

மனித உணர்வுகளின்
         தொடக்கப் புள்ளியும்
நாளை விடியும்
         என்று எதிற்பார்க்கும்
இதயத்தின்
        முதற் துடிப்பும்...!

இவ்விடை தெரியா
        வினாக்களுக்கு
விடை தேடுகின்ற
         தேடலாய் வாழ்வு...!

Saturday, 19 May 2012

அன்னையர் தினம்

உந்தன் உதிரத்தில்
       உருமாறியா உடல்...!

உந்தன் மூச்சிக்காற்றில்
       சுவாசித்த எங்கள்
முதல் சுவாசம்...!

 உந்தன் முகம் பார்க்க
        முதலில் அசைந்த
எங்கள் கண் இமை...!

பசிப்பதற்கு முன்
         பதறுகின்ற மனம்
அழுதவதற்குள் அள்ளி
        அனைத்துக்கொள்ளும்
அன்பு உருவம்...!

நிஜ மனிதனாய்
       நில உலகில்
நடமாட துடித்த
        நாடித்துடிப்பினை
நினைக்கின்ற
      நிஜதினமாய்...!

Saturday, 5 May 2012

கோடை

எழுகின்ற சூரியனின்
          இருமாப்பில் வீசுகின்ற தென்றலில்
ஏற்ப்பட்டுப்போன வறுமை...!


எற்றுக்கொண்ட தாகத்தை
        இறக்கிவைக்க
இழந்துவிட்ட பசுமை...!


வறண்டு போன
        பூமியில் வாசனை
தேடுகின்ற வண்ணத்துப் பூச்சி...!


கண்ணிமைக்கும் நேரத்தில்
       கொட்டிவிட்டு செல்கின்ற
மழைத்துளியும்
       மண்ணை தொட்டவுடன்
தொடங்கி வைக்கின்ற
        மண்வாசனையும்...!

Sunday, 22 April 2012

வானம்

தூசுத் துகள்களின்
        தஞ்சம் நீ உந்தன்
கண்ணீர்த் துளீயில்
        தழைக்கின்ற தரணி...!

மேகத்துக்குள்
        முகம் மறைக்கும்
வெண்ணிலவின்
          நானத்தின்
திரைச் சீலை நீ...!

மனித இனம்
          உடுத்தியிருக்கின்ற
உணரமுடியா உடையும் நீ
          கதிர் வீச்சு எனும்
கரையானில் எங்கள்
           வாழ்வு கரையாமலிருக்க...!

Saturday, 14 April 2012

மனிதன் மாறிவிட்டான்

காடுகளிள் அலைந்து
           திரிந்த மானுடம்
நாகரிக மேடையிலேறி
           நச்சினை விழுங்கிய
நாகப் பாம்பாய்
           ஒருவரை ஒருவர்
கடித்து கொண்டு
            மாண்டு போவதால்
மனிதன் மாறிவிட்டான்...!

அன்பெனும் ஆன்ற
            பெருமை கொன்று
ஆசையெனும்
            ஆயுதம் ஏந்தி
அச்சுருத்த வழ்ந்திருப்பதால்
            மனிதன் மாறிவிட்டான்...!

பரிவு என்னும்
             பாசவலை அறுத்து
பணமெனும்
            உயிற்ற பிணத்தை போற்றுவதால்
மனிதன் மாறிவிட்டன்...!

திறமை என்னும்
           தரத்தை மறந்து
தகுதி என்னும்
           தச்சனை தேவைப்படுவதால்
மனிதன் மாறிவிட்டன்...!