Saturday, 11 February 2012

சகுணம்

விடியும் வேலையில்
      விண்மீன் தரையிரங்கியது
வெற்றியின் பாதையில் அவனை
      வழி நடத்த...!

காலைக் கதிரவன்
      கனிவுடன் நிரப்பியது அவன்
இழந்திருந்த ஆற்றலை...!

விடிகின்ற வேலையில்
      சேவல் கொக்கரித்தது
வெற்றியின் இரகசியத்தை...!

ஆலயமணி ஒளித்தது
      வாழ்வின் உண்மையான
பாதையின் துவக்கமென்று...!

இயற்கை இயல்பாய்
      வாழ்த்தியது அவன்
வழ்வை இயல்பாய் வாழச்சொல்லி...!

Friday, 3 February 2012

ஏழையின் கனவு

வாழுகின்ற வாழ்வை
     வண்ணமயமாக்க நினைத்து...!
ஓடுகின்ற தென்றலில்
     ஒளிந்து கொள்ள ஆசைப்பட்டு...!

மலைமுகட்டில் முட்டி
    முடமாகிப் போனவனின்
ஆசைகளின் எச்சமாய் - இந்த
     ஏழையின் கனவு...!

Saturday, 28 January 2012

எழுதல்

தோல்வியில் துவளாதே
      லேசரென நினைத்துக்கொள்
தடைகளில் தடுக்கப்பட்டு
      தரிகெட்டுப் போனாலும்...!

தன்னம்பிக்கையில் எழுந்து
     இலக்கினை நோக்க - அது
தன்னையே அற்ப்பனித்துவிடும்
      உன்னால் உணரமுடியா - அந்த
அசரீரி சக்திக்கு...!

Friday, 20 January 2012

தானே புயல்

பூமித்தாயின் பெருமூச்சா - நீ
       எங்களின் புன்னகையை
பறித்துக் கொண்டு இருக்கிறாய்.....

அவளின் கண்ணீர் துளியா
       இந்த மழை
மக்களின் மனக் கோட்டையை
      மூழ்கச் செய்தது....

தனியாய் வந்து
      தனிமையை கொடுத்தும்
உடைமைகளை பறித்துக்கொண்டு
     உயிர் மட்டும் விட்டு த்
தடம் பதித்த
    தரிகெட்ட ஆற்றலாய்......

Friday, 6 January 2012

மயக்கம்

உலகத்தின் அனைத்தையும்
      வலிமையால் பெற்றுவிடலாம்
உண்மையான உறவைத் தவிர.....

வெற்றியை பெற்ற வீரனென
      வீதியில் வலம் வரலாம் ஆனால்
உண்மையான உள்ளத்தை
      வெல்ல இயலாது.....

அயிரத்தில் ஆசை அணுக்கலை
      ஆடக்கி விடலாம்
அன்பான ஆறுதல் கிடைக்காது......

ஆசையை விதைத்தால் அங்கே
       அன்பை அறுவடை செய்ய இயலாது.....

மண்ணில் பிறந்த
       மனிதம் மயங்குவது தன்
உண்மை உறவுகளை
      அறிய முடியாததால் தான்.......