Tuesday, 28 January 2014

தீண்டும் வரை

கண்மூடித்தனமான பாசமும்
      முட்டாலாக்கும்
கண்ணில் விழுவது
      தூசியென்று அறியாமல்...!

அளவுக்கதிகமான கவனமும்
       நம்மை களங்கப்படுத்தும்
அமைதியை குலைத்தது
      ஆஸ்தியின் ஆசையென்று அறியாமல்...!

அச்சுருத்த நினைக்கும்
    வாளும் நம்மை துளைப்பதில்லை
உறவென நாம்
    சூடிக்கொள்ளும் நாகம்
நம்மை தீண்டும் வரை...!

Thursday, 23 January 2014

குளிர்

வான்மழையாய் பொழிகின்ற
      பனித் துளி - அங்கே
மண்ணுக்குள் முகம்
     புதைக்கின்ற
கருஞ் சேவல்...!

கண் மறைக்கும்
     காரிருள் - அப்பொழுதே
கண் இமை
     திறப்பதாய் திறக்கின்ற
ஆலயத்தின்
      கதவுகள்...!

விழித்திருந்தும்
       தாயவளின் புடவையை
போர்வையாக்கிக் கொண்ட
       சிறுவன்...!

விடியாத வானிலையில்
      வீதியெங்கும்
வலம் வரும்
      மானிடத்தின்
காதருகே வெப்பம்
      தேடச் சொல்லும் - இக்
குளிர் காற்று...!

Friday, 10 January 2014

உதிர்வு

வஞ்சனையில்
      விழுகின்ற
வாளும்...!

வற்றாத நதிமகளின்
      நீர் வளத்தில்
உடைகின்ற கரையும்
     ஒன்றுதான்...!

இரண்டுமே
      நம்பிக்கை என்னும்
நாரிலிருந்து
     உதிர்ந்தவை...!

Wednesday, 1 January 2014

அன்னை தெராசா

ஏந்திய கரங்களை
       இறக்கியதில்லை
எச்சில் வந்து
      விழுந்த போதிலும்...!

இளகிய மனம்
       எற்றுக்கொண்ட
தண்டனையில்
     அன்னையானால் - இவ்
எடுத்தெறியப்பட்ட
     குழந்தைகளின்
எதிர்காலமாய்...!

அவள் தாழ்த்திக்
       கொண்ட கெளரவத்தில்
வாழ்ந்திருக்கிறாள் - இன்றும்
      ஆருயிர்கள் வாழ
வேண்டிய பாதையின்
      அர்த்தமாக...!