புதிதாய் மலர்ந்திருந்த
மலர் சூடிக்கொண்ட
புன்னகை…!
மண்ணுக்குள் மூச்சிமுட்டி
புதைந்திருந்த விதையின்
முதல் தளிர்தல்…!
வீசுகின்ற புயல் காற்றில்
கரை தொட்டுவிட்ட
துடுப்புகளின் நிம்மதி…!
புதிதாய் பொங்குகின்ற
நீறுற்றில் பெற்றுக்கொண்ட
புத்துணர்வு…!
Saturday, 30 November 2013
Monday, 25 November 2013
வீரம்
பிறந்தது
சதை பிண்டமானாலும்
வாள் கொண்டு
கிழித்து புதைத்த
மரபு...!
உடன் பிறப்புகளின்
உதிரம் சிதறினாலும்
உணர்வுகளில்
உதிக்க மறந்துவிட்ட
வீரம்...!
கலங்கமற்ற தாயின்
வாழ்வினை
கல்லிலே செதுக்கிட
கங்கை வரை
களம் கண்ட
வரலாறு..!
கலங்கிய பெண்மையின்
வழக்கிலும்
வறண்டு போன
நம் உதிரத்தின்
கொதிப்பு...!
சதை பிண்டமானாலும்
வாள் கொண்டு
கிழித்து புதைத்த
மரபு...!
உடன் பிறப்புகளின்
உதிரம் சிதறினாலும்
உணர்வுகளில்
உதிக்க மறந்துவிட்ட
வீரம்...!
கலங்கமற்ற தாயின்
வாழ்வினை
கல்லிலே செதுக்கிட
கங்கை வரை
களம் கண்ட
வரலாறு..!
கலங்கிய பெண்மையின்
வழக்கிலும்
வறண்டு போன
நம் உதிரத்தின்
கொதிப்பு...!
Monday, 18 November 2013
முத்தொழில்
மூன்று முகம்
கொண்டவனால் உருவாகி
உடல் உருமாறியவன்
உதவியிலே
உலகில் வாழ்ந்துவிட்டு
உடுக்கை ஏந்திவனின்
ஆட்டத்திலே அடங்கிவிடும்
மனித கூட்டம்...!
கொண்டவனால் உருவாகி
உடல் உருமாறியவன்
உதவியிலே
உலகில் வாழ்ந்துவிட்டு
உடுக்கை ஏந்திவனின்
ஆட்டத்திலே அடங்கிவிடும்
மனித கூட்டம்...!
Friday, 15 November 2013
ஆற்றுப்படுகை
ஆசையென்னும் கயிறு
கொண்டு இழுத்து சென்ற
வென் புனல் - அதன்
ஆணவத்தில்
விட்டு சென்ற - இதன்
வளர்ச்சியென்னும்
வண்டல் மண்...!
எல்லையோரத்தில்
எழுந்து நின்ற
ஆறு-கால் மண்டபம் - அங்கு
அறைகுறையாய்
வரையப்பட்டிருந்த
வள்ளுவரின் வரைபடம்...!
கரையெங்கும் வனப்பினை
கூட்டியிருந்த
நீலப் பசும் பாசி - அங்கும்
உதிர்ந்துவிட்ட சிறகென
சிதைந்து கிடந்த
சிறுவனின் அட்டைக் குடில்...!
கடந்து விட்ட
மழை வெள்ளத்தில்
சிதிலம் சிதிலமென
சிதைந்திருந்தும்
சிவன் சூடியிருக்கும்
பிறை நிலவாய் - இவ்
ஆற்றுப்பதுகை...!
கொண்டு இழுத்து சென்ற
வென் புனல் - அதன்
ஆணவத்தில்
விட்டு சென்ற - இதன்
வளர்ச்சியென்னும்
வண்டல் மண்...!
எல்லையோரத்தில்
எழுந்து நின்ற
ஆறு-கால் மண்டபம் - அங்கு
அறைகுறையாய்
வரையப்பட்டிருந்த
வள்ளுவரின் வரைபடம்...!
கரையெங்கும் வனப்பினை
கூட்டியிருந்த
நீலப் பசும் பாசி - அங்கும்
உதிர்ந்துவிட்ட சிறகென
சிதைந்து கிடந்த
சிறுவனின் அட்டைக் குடில்...!
கடந்து விட்ட
மழை வெள்ளத்தில்
சிதிலம் சிதிலமென
சிதைந்திருந்தும்
சிவன் சூடியிருக்கும்
பிறை நிலவாய் - இவ்
ஆற்றுப்பதுகை...!
Monday, 11 November 2013
உறவுகளின் நெருக்கம்
உதடுகளில் உதிக்கின்ற
சொற்களையும்
உள்ளத்தில் விரிகின்ற
சுயத்தினையும்
குறைக்கின்ற துரமாய்
இவ் உறவுகளின்
நெருக்கம்...!
தாங்கிய கரங்களை
துளைக்காத
தடுமாறிய கால்களின்
துணைக்கான
தோன்றலில் உணருகின்ற
இவ் உறவுகளின்
நெருக்கம்...!
சொற்களையும்
உள்ளத்தில் விரிகின்ற
சுயத்தினையும்
குறைக்கின்ற துரமாய்
இவ் உறவுகளின்
நெருக்கம்...!
தாங்கிய கரங்களை
துளைக்காத
தடுமாறிய கால்களின்
துணைக்கான
தோன்றலில் உணருகின்ற
இவ் உறவுகளின்
நெருக்கம்...!
Wednesday, 6 November 2013
காவிரி டெல்டா
வற்றாத நதிமகளின்
வளத்தினில் வளர்ந்திருந்த
நெற்கதிர்கள்
வானுயர புல்லாங்குழலாய்
கானம் இசைத்திருந்த
மூங்கில் தோட்டம்..!
துள்ளிக் குதித்தோடும்
முயல் தூவிச்சென்ற
வர்ண ஜாலம்
எட்டாத குடைக்குள்ளே
கசிந்து வந்த
வெண் மழைச் சாரல்...!
ஒண்டிக் கொள்ள
குடிசையில்லாத துரத்தில்
அல்லி வீற்றிருந்த
தாமரைக் குளம்...!
பாதிகால் நனையாது
பாய்ந்திருந்த தண்ணீர் - அங்கே
பயந்து பயந்து
நீந்திச் சென்ற
கெண்டை மீின்...!
பாதி வயிறு நிறைய
சேறு மிதிக்கின்ற
மனிதக் கூட்டம்
அங்கேயும்
சோர்வு தெறியாமலிருக்க
பாடி வந்த கானம்...!
வளத்தினில் வளர்ந்திருந்த
நெற்கதிர்கள்
வானுயர புல்லாங்குழலாய்
கானம் இசைத்திருந்த
மூங்கில் தோட்டம்..!
துள்ளிக் குதித்தோடும்
முயல் தூவிச்சென்ற
வர்ண ஜாலம்
எட்டாத குடைக்குள்ளே
கசிந்து வந்த
வெண் மழைச் சாரல்...!
ஒண்டிக் கொள்ள
குடிசையில்லாத துரத்தில்
அல்லி வீற்றிருந்த
தாமரைக் குளம்...!
பாதிகால் நனையாது
பாய்ந்திருந்த தண்ணீர் - அங்கே
பயந்து பயந்து
நீந்திச் சென்ற
கெண்டை மீின்...!
பாதி வயிறு நிறைய
சேறு மிதிக்கின்ற
மனிதக் கூட்டம்
அங்கேயும்
சோர்வு தெறியாமலிருக்க
பாடி வந்த கானம்...!
Subscribe to:
Comments (Atom)