Sunday, 30 June 2013

நூற் பூங்கா

உடல் ஊனமானாலும்
      உதிரத்தின் கரைப்பினில்
உருவாக்கிய உருவங்கள்
      உறைந்து போன
மனங்களையும்
      உலுக்கி வைக்க...!

ஆறாண்டு அடுக்கிவைத்த
      அட்டைக்கல் கோபுரம் - அங்கு
அவிழ்ந்துவிடாமல்
      சுற்றப்பட்ட நூல்களில்
கண்டெடுத்த பூஞ்சோலை...!


ஊனம் குறையில்லை
      ஊருக்கு உரைத்து - அவர்
உதிரத்தில் உருமாறி
      உலக சாதனையென
சரித்திரக் கால் பதிக்க - இந்த
      நூற் பூங்கா...!

Friday, 21 June 2013

மலை மேகம்


மென் பனிச் சாரல்
     மேனி தொடும்
மேகம் - அங்கு
     பனித் துளிகளை
சுமந்துநின்ற
     பனை ஓலை...!

காலடி தெரியாத
     சாரல் மழை
பாதி முகம்
    காட்டி சிரித்த
பச்சிளங்
    குழந்தை...!

அன்றே அறுவடை
    செய்திருந்த
காய் கனிகள் - அங்கும்
    ஆற்றுத் தண்ணீரின்
துவக்கத்திற்கு
    அழுது கொண்டிருந்த
நிலமகள்...!


பசுமை எங்கும்
     படர்ந்திருக்க
பார்க்குமிடமெல்லாம்
     புன்னகை தாங்கிய
புதுப்
        பூக்கள்...!

Thursday, 20 June 2013

திருத்தங்கள்

நெருப்பினில் வைத்து
       நெருடிய விரல்களின்
வடுக்களில் வந்த
       திருத்தங்கள்...!

தடுமாறி கீழே
      விழுகையில்
சரீரத்தில் ஏற்பட்ட
      திருத்தங்கள்...!

பலமாக வேண்டியவை
       பலவீணமாகையில்
மனவலிமையில் உருவான
       திருத்தங்கள்...!

சூழ்ந்து நின்ற
       சுற்றமும் நட்பும்
சுத்திகரிக்கப்பட்டு -  நம்
       இயல்பில் உருமாறிய
திருத்தங்கள்...!

திருத்தங்கள்
        தீர்வதில்லை
தினம் தினம் வருகிற
        திகைப்புகள்
தீரும் வரை...!

Saturday, 8 June 2013

எழுகிற சுரியன்

வானம் விரிய
     வங்கக் கடல் கொதிக்க
எழுந்தது - இந்த
     எரிகிற கோளம்
உலக இயக்கத்தை
     எழுப்புவதற்க்கு...!

பூக்கள் மலர்வதும்
    புன்னகை பூப்பதும் - உந்தன்
அன்பென்னும்
    ஆற்றுப்படுத்திய உஷ்ணத்தில்...!

பரவட்டும்
    உடல் முழுவதும்   
உடல் பிரிகிற இறகில்
         இயற்கையை இரசித்திருக்க...!

Sunday, 2 June 2013

எல்லை புரம்

சில்லென்று சிதறிய
         பனித்துளியில் முகம்
சிலிர்த்த
         பனிப் பூக்கள்...!

நீர் திவளையில்
         சிதறிய ஒளி - அதில்

வானத்தில் வரையப்பட்ட
         ஓவியம்...!

ஊர் காவளுக்காக
         காட்டுக்குள்ளே வைக்கப்பட்ட
அய்யனார் - அங்கு
         எட்டு நான்கில்
எழுந்து நின்ற
          வெண் குதிரை...!

வீதியெங்கும் விதைக்கப்பட்ட
         வெள்ளைப் பூக்கள் - அங்கே
 தோள்களின் வலிமையில்
         வலம் வருகின்ற
எல்லைக் காவலன்...!