Friday, 15 February 2013

புன்னகை

எளிமையான வாழ்வினை
          நிரப்ப வந்த
எதார்த்த நண்பன்...!

மருந்துகள் அல்லாத
        மனித வாழ்விற்க்கான
மருத்துவம்...!

பூத்தம் புதிதாய்
        பூத்த பூவின்
மலர்ச்சியிடம் - போட்டியிட்ட
        மனிதத்தின்
ஒற்றை ஆயுதம்...!

2 comments:

Karthikeyan said...

நண்பா.. பத்தோடு பதினொன்றாக யாராலும் தள்ளிவிட முடியாத அற்புதமான எழுத்து உன்னுடையது. நிறைய எழுது, நான் படித்துக்கொண்டிருக்கிறேன். எக்காலத்திலும், எதற்காகவும் எழுதுவதை நிறுத்திவிடாதே... கவிதைகள் அத்தனையும் அற்புதம்.
உன்னுடைய 'About me' ஒன்றுபோதும் உன் எழுத்தை அறிந்துகொள்ள..., உன் எழுத்தின் அறிமுகம் எனக்கு அருண்ராஜ் மூலம்தான் கிடைத்தது, அவனுக்கும் என் நன்றி.

tholiansilambu said...

100 பதிவுகளை எட்ட போகின்ற தருணத்தில் உந்தன் ஆதரவான வார்த்தைகள் உண்மையான ஆர்வத்தை, ஆற்றலை எனக்குள் தந்திருக்கிறது...நன்றி கார்த்திக்...