பிறை நிலவு
பிறந்த நேரம்
அதன் அழகு
முகத்தை மறைக்க
நினைக்கின்ற மேகம்...!
ஜோடிப் புறா
வானமே தன் வசமெனப்
பறக்கின்ற பரபரப்பு...!
வெயிலின் வாட்டத்தின்
வதை பாடு முடிந்ததென
தலையசைத்து கொண்டாடுகின்ற
இலைத்துளிகலும்
துன்ப முடிவினை
தூது கொண்டுவரும் தென்றல் காற்றும்...!
அன்பு மொழியினை
பேசுகின்ற ஆலய ஓசைகளும்
அர்த்தமற்ற புறாக்களின்
கீச்சுக் குரல்களும்
அழகான மாலையை
அலங்கறிப்பதாய்...!
Saturday, 30 June 2012
Sunday, 24 June 2012
தவறுதல்
அன்பு
ஆயுதம் அல்ல
அழிப்பதற்க்கு...!
அறிவு
காகிதம் அல்ல
கிழித்தெரிய...!
பாசம்
பாசறை அல்ல
காயப் படுத்திக் கொள்ள...!
நாட்கள்
நரகம் அல்ல
நகர்த்திச் செல்ல...!
உண்மை
உறவுகள் உருவாவதில்லை
உண்மையாக இல்லாத வரை...!
இவைகளில்
தடுமாறும் போது
வாழ்வு தடம் மாறுவது
தவிர்க்க இயலாததே...!
ஆயுதம் அல்ல
அழிப்பதற்க்கு...!
அறிவு
காகிதம் அல்ல
கிழித்தெரிய...!
பாசம்
பாசறை அல்ல
காயப் படுத்திக் கொள்ள...!
நாட்கள்
நரகம் அல்ல
நகர்த்திச் செல்ல...!
உண்மை
உறவுகள் உருவாவதில்லை
உண்மையாக இல்லாத வரை...!
இவைகளில்
தடுமாறும் போது
வாழ்வு தடம் மாறுவது
தவிர்க்க இயலாததே...!
Thursday, 21 June 2012
நிகழ்வு
மலர்
பூமியில் புதைந்திருந்த
நீர்வலத்தில் நிறைந்த
உந்தன் புன்னகை....!
முட்கள்
வறண்டு போன பூமியில்
வறண்டு போன உன் உதிரத்தில்
எழுந்த கோபம்...!
காதலன்
உந்தன் கோபத்திற்கு ஆலாகி
புன்னகையை பரித்தான் தன்
புன்னகையை இழப்பதற்க்கு...!
Sunday, 10 June 2012
நிலவரம்
ஆயிரங்கள் கரைகின்றன
ஆட்டத்தில் - ஏழைகளின்
அடிவயிறு பசித்திருந்தாலும்...!
நாடகங்கள் நிகழ்த்தப்படுகின்றன
நடுத்தற மக்களின்
நரம்புத் துடிப்புக்கள்
நடுக்கம் கண்டாலும்...!
ஊர் தலைவர்கள் உல்லசத்தில்
உண்மையான உழைப்பின் உதிரங்கள்
உதாசினப் படுத்தப் பட்டாலும்...!
மாளிகைகள்
மகுடம் சூட்டிக்கொள்கின்றன
இரக்கம் என்னும்
இயல்பினை மறந்திருந்தாலும்...!
ஆட்டத்தில் - ஏழைகளின்
அடிவயிறு பசித்திருந்தாலும்...!
நாடகங்கள் நிகழ்த்தப்படுகின்றன
நடுத்தற மக்களின்
நரம்புத் துடிப்புக்கள்
நடுக்கம் கண்டாலும்...!
ஊர் தலைவர்கள் உல்லசத்தில்
உண்மையான உழைப்பின் உதிரங்கள்
உதாசினப் படுத்தப் பட்டாலும்...!
மாளிகைகள்
மகுடம் சூட்டிக்கொள்கின்றன
இரக்கம் என்னும்
இயல்பினை மறந்திருந்தாலும்...!
Saturday, 2 June 2012
வினாக்கள்
மனிதம் வளைந்து
செல்லும் வளைவு நெளிவுகள்
மனம் மயங்குகின்ற
மனிதத்தின் மனப்படிவுகள்...!
மனித உணர்வுகளின்
தொடக்கப் புள்ளியும்
நாளை விடியும்
என்று எதிற்பார்க்கும்
இதயத்தின்
முதற் துடிப்பும்...!
இவ்விடை தெரியா
வினாக்களுக்கு
விடை தேடுகின்ற
தேடலாய் வாழ்வு...!
செல்லும் வளைவு நெளிவுகள்
மனம் மயங்குகின்ற
மனிதத்தின் மனப்படிவுகள்...!
மனித உணர்வுகளின்
தொடக்கப் புள்ளியும்
நாளை விடியும்
என்று எதிற்பார்க்கும்
இதயத்தின்
முதற் துடிப்பும்...!
இவ்விடை தெரியா
வினாக்களுக்கு
விடை தேடுகின்ற
தேடலாய் வாழ்வு...!
Subscribe to:
Comments (Atom)