Wednesday, 29 February 2012

அநாவசியம்


உந்தன் இமைக்கு அருகில்
      உலகின் உலைக்கலம்
சுழலும் போது
      உருகுகின்ற உள்ளம் உனக்கெதற்கு...!

நாளை கூட நிலையில்லை
     எண்ணும் பொழுது
நடுங்குகின்ற கால்கள்  எதற்கு...!

கனிவான உள்ளம் கூட
      காயப்படும் போது
எதிர் காலக் கனவெதற்கு...!

கண்கள் செல்கின்ற பாதையில்
      சென்றால் உன் கனவுகள் கூட
கரைக்கப் படும்...!

மனதை இருகவிடு
      மதியின் வலிமையில்
 உந்தன் ஆன்மாவின்
       உண்மை பொருள் தேட ...!


Saturday, 25 February 2012

வேற்றுமை

நிஜத்துக்கும் நினைவுக்குமான தூரம்
    நாளைக்கும் இன்றுக்குமான நீளம்...!

மனிதத்தால் வாழ முடிவது
    வலிமையான நிஜத்தால் மட்டுமே
வலிமையற்ற வெற்று
    வார்த்தைகளால் அல்ல...!

இருள் வந்தால்
    நிழல் விலகும்
இமை மூடினாலும்
    நிஜம் அருகினிலிருக்கும்...!

Friday, 17 February 2012

முதிர் கன்னி

வயதின் முதிர்வாலும்
       வருமையின் வளத்தாலும்
விழிகளின் விளிம்பினில்
      வழிகின்ற கண்ணீரில்
கரைகின்ற அவளுடைய
      நம்பிக்கை.....


Wednesday, 15 February 2012

ராணுவம்

கல்லினுல் ஊர்ந்தாய் எங்கள்
      கண்களில் கண்ணீர் துளி
கலங்காமலிருக்க...!

மலை முகடுகளில்
      சுற்றித்திறிந்தாய் எங்கள்
சுதந்திரம் பறிபோகாமலிருக்க...!

கடும் வெயிலிலும் குளிரிலும்
      தவமிருந்தாய் நம்
தடங்களை காப்பற்றி க் கொள்ள ...!

தாய் மண்ணைக் காக்க
      உயிர் துறந்தாய் மண்ணின்
தரமான படைப்பென்று... !

Saturday, 11 February 2012

சகுணம்

விடியும் வேலையில்
      விண்மீன் தரையிரங்கியது
வெற்றியின் பாதையில் அவனை
      வழி நடத்த...!

காலைக் கதிரவன்
      கனிவுடன் நிரப்பியது அவன்
இழந்திருந்த ஆற்றலை...!

விடிகின்ற வேலையில்
      சேவல் கொக்கரித்தது
வெற்றியின் இரகசியத்தை...!

ஆலயமணி ஒளித்தது
      வாழ்வின் உண்மையான
பாதையின் துவக்கமென்று...!

இயற்கை இயல்பாய்
      வாழ்த்தியது அவன்
வழ்வை இயல்பாய் வாழச்சொல்லி...!

Friday, 3 February 2012

ஏழையின் கனவு

வாழுகின்ற வாழ்வை
     வண்ணமயமாக்க நினைத்து...!
ஓடுகின்ற தென்றலில்
     ஒளிந்து கொள்ள ஆசைப்பட்டு...!

மலைமுகட்டில் முட்டி
    முடமாகிப் போனவனின்
ஆசைகளின் எச்சமாய் - இந்த
     ஏழையின் கனவு...!