உந்தன் இமைக்கு அருகில்
உலகின் உலைக்கலம்
சுழலும் போது
உருகுகின்ற உள்ளம் உனக்கெதற்கு...!
நாளை கூட நிலையில்லை
எண்ணும் பொழுது
நடுங்குகின்ற கால்கள் எதற்கு...!
கனிவான உள்ளம் கூட
காயப்படும் போது
எதிர் காலக் கனவெதற்கு...!
கண்கள் செல்கின்ற பாதையில்
சென்றால் உன் கனவுகள் கூட
கரைக்கப் படும்...!
மனதை இருகவிடு
மதியின் வலிமையில்
உந்தன் ஆன்மாவின்
உண்மை பொருள் தேட ...!


