விடியும் முன்னே
ஏற்றிவைத்த தீபங்களாய்
அந் நட்சத்திரக்
கூட்டம்...!
காலைக் கதிரவனின்
கதகதப்பில்
மறைந்து போகும்
பனித் துளிகள்...!
மேகம் கறுக்கு
முன்னே
தோகை விரித்த
மயில்...!
துலாபாரத்தில்
வீற்றிருந்தும்
விடாமல் புன்னகைத்த
சிறுமி...!
தோற்றம் தாண்டி
தோள் கொடுக்கும்
தோழனும் - அங்கே
உயிர் காக்க
ஏழை கொடுத்துவிட்ட
ஒரு குவளை
தண்ணீரும்...!
Tuesday, 6 October 2015
Sunday, 6 September 2015
இயற்கை தந்த நம்பிக்கை
மின்னும்
வானிலை
மிதக்கும்
மேகங்கள்...!
நிசப்த
நிலம்
நீர் வழி
வந்ததில்
காற்று
சுமந்து வந்த
ஈரப்பதம்...!
பசுமை
ஆடை உடுத்திய
வயல்
வெளிகள்
கூடு தேடி
பறந்து சென்ற
வெண் புறாக்கள்...!
வெட்கத்தில்
பாதி முகம்
காட்டும்
பிறை நிலவு
மையிருட்டில்
விளக்கேற்றுவதாய்
மேற்கே
முளைத்திருந்த வெள்ளி்...!
இருள்
கவர்ந்தும்
விடியல்
வருமென
இயல்பாய்
நெஞ்சுக்குள்
நிலைத்திருந்த
நம்பிக்கை...!
Tuesday, 25 August 2015
சாலை வழி
வானவில்லின்
வண்ணங்களை
வெட்டியெடுத்து
வரைந்து விட்ட
ஓவியமாய் அச்
சாலை வழி...!
பாதை எங்கிலும்
வாழ்வின் வழிகாட்டும்
வள்ளுவன் வாக்கினை
சுமந்து நிற்கும்
மரங்கள்...!
பரந்து விரிந்த
மரக்கிளையில்
அங்கும் இங்குமாய்
பறந்து திரிந்த
கிளிக் கூட்டமும்...!
சட்டென விழும்
சூரியக் கதிரும்
முரிந்து போவதாய்- அக்
குளத்து நீரின்
சல சலப்பு...!
ஓரமாய் ஓங்கி
எழுந்த பின்னும்
கர்வம்
எனக்கில்லை என
தலை குனிந்த
மூங்கிலடி...!
நீங்காமல் ஒலித்திருந்த
இரண்டெழுத்து மந்திரமும்
வலியவர்
வயிறு நிறைய
இட்டு வைத்த
வாழை இலையும்...!
வண்ணங்களை
வெட்டியெடுத்து
வரைந்து விட்ட
ஓவியமாய் அச்
சாலை வழி...!
பாதை எங்கிலும்
வாழ்வின் வழிகாட்டும்
வள்ளுவன் வாக்கினை
சுமந்து நிற்கும்
மரங்கள்...!
பரந்து விரிந்த
மரக்கிளையில்
அங்கும் இங்குமாய்
பறந்து திரிந்த
கிளிக் கூட்டமும்...!
சட்டென விழும்
சூரியக் கதிரும்
முரிந்து போவதாய்- அக்
குளத்து நீரின்
சல சலப்பு...!
ஓரமாய் ஓங்கி
எழுந்த பின்னும்
கர்வம்
எனக்கில்லை என
தலை குனிந்த
மூங்கிலடி...!
நீங்காமல் ஒலித்திருந்த
இரண்டெழுத்து மந்திரமும்
வலியவர்
வயிறு நிறைய
இட்டு வைத்த
வாழை இலையும்...!
Thursday, 30 July 2015
கண்ணீர் துளிகள்
எளிமையும்
அழகு சேர்க்கும்
ஏழையின் கனவுகளும்
ஏற்றம் பெறும்
என வாழச்
சொன்னவரே
வாழ்ந்து
முடித்தவரே...!
உந்தன்
முகம் பார்த்து
மாணவர்களின்
உள்ளம் கொண்ட
மகிழ்ச்சியே
நீங்கள்
சூடிக் கொண்ட
மணி மகுடம்...!
உங்கள்
மனஎழுச்சியில்
எழுந்து நின்ற
ஏவுகணைகளும்
கண் விழித்தே
வலம்வரும்
விண்கலத்திற்கும்
கருப்பு திரை
விரித்து
நடத்தி விட்ட
அணு குண்டு
சோதனைகளும்...!
நீங்கள்
விட்டு சென்ற
அக்னியின் சிறகுகள்
என்றென்றும் - எங்கள்
நம்பிக்கையின்
ஆரம்பப் புள்ளியாய்...!
பல ஓளியிலிருந்து
ஓரொளி நீங்கள்
சேர்த்து வைத்த
பொக்கிஷம் - உங்கள்
ஓர் ஒளியால்
தூண்டப்பட்ட
உணர்வுகளிலே இங்கு
நாங்கள்...!
இன்று நாடே
சிந்துகின்ற
கண்ணீர் துளிகள்
கூறும் - நீங்கள்
பாரதத்தை
அலங்கரித்த
உண்மையான
தலை மகனென்று...!
எங்கு சென்றாலும்
தாய் மொழியை
நெஞ்சில் சுமந்து
நின்றவரே - உங்கள்
உடல் பிரிந்தாலும்...!
நீங்கள்
விட்டு சென்ற
உணர்வுகள்
இம்மண்ணின்
தரமான
நினைவுகளாய்
என்றென்றும்...!
அழகு சேர்க்கும்
ஏழையின் கனவுகளும்
ஏற்றம் பெறும்
என வாழச்
சொன்னவரே
வாழ்ந்து
முடித்தவரே...!
உந்தன்
முகம் பார்த்து
மாணவர்களின்
உள்ளம் கொண்ட
மகிழ்ச்சியே
நீங்கள்
சூடிக் கொண்ட
மணி மகுடம்...!
உங்கள்
மனஎழுச்சியில்
எழுந்து நின்ற
ஏவுகணைகளும்
கண் விழித்தே
வலம்வரும்
விண்கலத்திற்கும்
கருப்பு திரை
விரித்து
நடத்தி விட்ட
அணு குண்டு
சோதனைகளும்...!
நீங்கள்
விட்டு சென்ற
அக்னியின் சிறகுகள்
என்றென்றும் - எங்கள்
நம்பிக்கையின்
ஆரம்பப் புள்ளியாய்...!
பல ஓளியிலிருந்து
ஓரொளி நீங்கள்
சேர்த்து வைத்த
பொக்கிஷம் - உங்கள்
ஓர் ஒளியால்
தூண்டப்பட்ட
உணர்வுகளிலே இங்கு
நாங்கள்...!
இன்று நாடே
சிந்துகின்ற
கண்ணீர் துளிகள்
கூறும் - நீங்கள்
பாரதத்தை
அலங்கரித்த
உண்மையான
தலை மகனென்று...!
எங்கு சென்றாலும்
தாய் மொழியை
நெஞ்சில் சுமந்து
நின்றவரே - உங்கள்
உடல் பிரிந்தாலும்...!
நீங்கள்
விட்டு சென்ற
உணர்வுகள்
இம்மண்ணின்
தரமான
நினைவுகளாய்
என்றென்றும்...!
Thursday, 2 July 2015
விடியும் வரை
நட்சத்திரங்களை
கோர்த்து
சென்ற
மின்னல் கீற்று...!
வட்டமிட்டு
நான்கு திசையும்
பறந்து சென்ற
வெண் புறாக்கள்...!
மெல்ல மெல்ல
வீசிய காற்றினில்
மிதந்து வந்த
மெல்லிசை...!
உருகும் பனி
உரு கொடுக்க
புன்னகைக்கின்ற
புதுப் பூக்கள்...!
இருள் குடித்தும்
ஒளி வீசத்
தொடங்கிய
காலைக் கதிரவன்...!
விழுந்த பின்
எழுந்தாலும்
இறகுக்கு
வலுவூட்டி
பறக்கின்ற
சிறு பறவை...!
கோர்த்து
சென்ற
மின்னல் கீற்று...!
வட்டமிட்டு
நான்கு திசையும்
பறந்து சென்ற
வெண் புறாக்கள்...!
மெல்ல மெல்ல
வீசிய காற்றினில்
மிதந்து வந்த
மெல்லிசை...!
உருகும் பனி
உரு கொடுக்க
புன்னகைக்கின்ற
புதுப் பூக்கள்...!
இருள் குடித்தும்
ஒளி வீசத்
தொடங்கிய
காலைக் கதிரவன்...!
விழுந்த பின்
எழுந்தாலும்
இறகுக்கு
வலுவூட்டி
பறக்கின்ற
சிறு பறவை...!
Subscribe to:
Posts (Atom)