மலை முகடுகளில்
உலவுகின்ற
முழு நிலவு...!
பனியினை
மெல்ல மெல்ல
கரைத்துக்
கொண்டிருந்த
தென்றல்...!
தென்னையில்
வாழ்திருந்து
விழுகையில்
தோகை விரித்த
மயில்...!
விடியலை
கொஞ்சம் கொஞ்சமாய்
விழுங்கிக்
கொண்டிருந்த
மை இருட்டு...!
முகம்
பார்க்கும் முன்னே
சேயினை முழுதாய்
நேசிக்கின்ற
தாய் மனம்...!
பிழையே ஆனாலும்
மழலையின்
மழுங்கிய
முதல் உச்சரிப்பு...!
Saturday, 9 May 2015
Thursday, 16 April 2015
கர்வம்
மழலை தொடங்கி
மடியும் வரை
மனிதம் மறக்காமல்
சேர்த்து வைக்கும்
ஒற்றை எதிர்மறை...!
நிழல்களில்
தெரிவதில்லை ஆனாலும்
நிஜத்தினில்
நெருடுகின்ற
நினைவுகளின்
முதற் புள்ளி...!
இது
தொலைந்து போகையில்
தொடர்வதும்
தொடர்கையில்
தொலைவதுமாய் - நம்
மன நிம்மதி...!
மடியும் வரை
மனிதம் மறக்காமல்
சேர்த்து வைக்கும்
ஒற்றை எதிர்மறை...!
நிழல்களில்
தெரிவதில்லை ஆனாலும்
நிஜத்தினில்
நெருடுகின்ற
நினைவுகளின்
முதற் புள்ளி...!
இது
தொலைந்து போகையில்
தொடர்வதும்
தொடர்கையில்
தொலைவதுமாய் - நம்
மன நிம்மதி...!
Wednesday, 18 March 2015
இழப்பு
நட்சத்திர ஒளித்
துகள்கள் தூவிய
மழையினிலே
நனைகின்ற பூமி...!
அலைகடல் அள்ளிக்
கொண்டுவந்து
வீசிய சாரலில்
உருண்டு வந்த
வெண் சங்கு...!
அச்சப்பட்டு
அனைத்தையும்
ஓட்டுக்குள்
அடக்கிக் கொண்ட
ஆமை...!
ஆழத்தின் அளவில்
அமைதி கொண்ட
கடலின்
மையப் புள்ளி...!
சந்திரனும் தென்றலும்
கை கோர்த்து
அள்ளிக் கொண்டுபோன
மனித மனங்கள் ...!
துகள்கள் தூவிய
மழையினிலே
நனைகின்ற பூமி...!
அலைகடல் அள்ளிக்
கொண்டுவந்து
வீசிய சாரலில்
உருண்டு வந்த
வெண் சங்கு...!
அச்சப்பட்டு
அனைத்தையும்
ஓட்டுக்குள்
அடக்கிக் கொண்ட
ஆமை...!
ஆழத்தின் அளவில்
அமைதி கொண்ட
கடலின்
மையப் புள்ளி...!
சந்திரனும் தென்றலும்
கை கோர்த்து
அள்ளிக் கொண்டுபோன
மனித மனங்கள் ...!
Thursday, 19 February 2015
இனிமை
மரங்களின் வெறுமை
வானத்தின் வெளுப்பு
இமை வருடிய காற்று
முகம் காட்டா குயில்
கொண்டுவந்த கானம்
நதிமகளின் தாலாட்டில்
மிதந்து வந்த
புல்லாங்குழல் - அங்கும்
போட்டியிட்ட மூங்கில்
உருவாக்கிய சங்கீதம்...!
மின்னலின் கீற்று
தொட்டுச்சென்ற
மலை முகடு
வீதியெங்கும்
ஒன்றிரண்டாய்
விதைக்கப்பட்ட
மழைத்துளிகள்
இலையுதிர் காலத்திலும்
உதிராத நினைவுகள்
எடுத்துவந்த சந்தோசமாய்
விட்டு விட்டுப் பேசிய - அம்
மழலையின் குரலினிமை...!
வானத்தின் வெளுப்பு
இமை வருடிய காற்று
முகம் காட்டா குயில்
கொண்டுவந்த கானம்
நதிமகளின் தாலாட்டில்
மிதந்து வந்த
புல்லாங்குழல் - அங்கும்
போட்டியிட்ட மூங்கில்
உருவாக்கிய சங்கீதம்...!
மின்னலின் கீற்று
தொட்டுச்சென்ற
மலை முகடு
வீதியெங்கும்
ஒன்றிரண்டாய்
விதைக்கப்பட்ட
மழைத்துளிகள்
இலையுதிர் காலத்திலும்
உதிராத நினைவுகள்
எடுத்துவந்த சந்தோசமாய்
விட்டு விட்டுப் பேசிய - அம்
மழலையின் குரலினிமை...!
Thursday, 12 February 2015
கொடியும் சிறுவனும்
முகம் மறைக்கும்
உறை பனி
காற்றில் மிதந்து வந்த
மித மழைச் சாரல்
அங்கே
நேசமும் தூய்மையும்
நிறைந்த சிறுவனின்
நெஞ்சம் சுமந்திருந்த
மூவர்ணக்கொடி...!
மண்ணின் மரபுகளை
நினைவுக்கு கொண்டுவரும்
முப்படையின் முழக்கம்
முன் நிற்க
அன்னையின் அன்பினில்
அசைந்தாடும்
பிள்ளையைப் போல்
அசைந்திருந்த
மூவர்ணக்கொடி...!
கண்டிருந்த சிறுவனின்
கண்களில் தாய்மண்ணின்
பெருமை கண்ட
கர்வம் கொட்டி கிடக்க
அவன் கால்களிலோ
அழுக்கான
மனங்கள் தரும்
நெருக்கடியில்
நடக்காத தோரணை...!
உறை பனி
காற்றில் மிதந்து வந்த
மித மழைச் சாரல்
அங்கே
நேசமும் தூய்மையும்
நிறைந்த சிறுவனின்
நெஞ்சம் சுமந்திருந்த
மூவர்ணக்கொடி...!
மண்ணின் மரபுகளை
நினைவுக்கு கொண்டுவரும்
முப்படையின் முழக்கம்
முன் நிற்க
அன்னையின் அன்பினில்
அசைந்தாடும்
பிள்ளையைப் போல்
அசைந்திருந்த
மூவர்ணக்கொடி...!
கண்டிருந்த சிறுவனின்
கண்களில் தாய்மண்ணின்
பெருமை கண்ட
கர்வம் கொட்டி கிடக்க
அவன் கால்களிலோ
அழுக்கான
மனங்கள் தரும்
நெருக்கடியில்
நடக்காத தோரணை...!
Subscribe to:
Posts (Atom)