மரங்களின் வெறுமை
வானத்தின் வெளுப்பு
இமை வருடிய காற்று
முகம் காட்டா குயில்
கொண்டுவந்த கானம்
நதிமகளின் தாலாட்டில்
மிதந்து வந்த
புல்லாங்குழல் - அங்கும்
போட்டியிட்ட மூங்கில்
உருவாக்கிய சங்கீதம்...!
மின்னலின் கீற்று
தொட்டுச்சென்ற
மலை முகடு
வீதியெங்கும்
ஒன்றிரண்டாய்
விதைக்கப்பட்ட
மழைத்துளிகள்
இலையுதிர் காலத்திலும்
உதிராத நினைவுகள்
எடுத்துவந்த சந்தோசமாய்
விட்டு விட்டுப் பேசிய - அம்
மழலையின் குரலினிமை...!
Thursday, 19 February 2015
Thursday, 12 February 2015
கொடியும் சிறுவனும்
முகம் மறைக்கும்
உறை பனி
காற்றில் மிதந்து வந்த
மித மழைச் சாரல்
அங்கே
நேசமும் தூய்மையும்
நிறைந்த சிறுவனின்
நெஞ்சம் சுமந்திருந்த
மூவர்ணக்கொடி...!
மண்ணின் மரபுகளை
நினைவுக்கு கொண்டுவரும்
முப்படையின் முழக்கம்
முன் நிற்க
அன்னையின் அன்பினில்
அசைந்தாடும்
பிள்ளையைப் போல்
அசைந்திருந்த
மூவர்ணக்கொடி...!
கண்டிருந்த சிறுவனின்
கண்களில் தாய்மண்ணின்
பெருமை கண்ட
கர்வம் கொட்டி கிடக்க
அவன் கால்களிலோ
அழுக்கான
மனங்கள் தரும்
நெருக்கடியில்
நடக்காத தோரணை...!
உறை பனி
காற்றில் மிதந்து வந்த
மித மழைச் சாரல்
அங்கே
நேசமும் தூய்மையும்
நிறைந்த சிறுவனின்
நெஞ்சம் சுமந்திருந்த
மூவர்ணக்கொடி...!
மண்ணின் மரபுகளை
நினைவுக்கு கொண்டுவரும்
முப்படையின் முழக்கம்
முன் நிற்க
அன்னையின் அன்பினில்
அசைந்தாடும்
பிள்ளையைப் போல்
அசைந்திருந்த
மூவர்ணக்கொடி...!
கண்டிருந்த சிறுவனின்
கண்களில் தாய்மண்ணின்
பெருமை கண்ட
கர்வம் கொட்டி கிடக்க
அவன் கால்களிலோ
அழுக்கான
மனங்கள் தரும்
நெருக்கடியில்
நடக்காத தோரணை...!
Friday, 23 January 2015
இருள் ஒளி
மின்னலின் கீற்றினில்
முகம் பார்க்கும்
மை இருட்டு - அங்கே
மரம் சூடிக் கொண்ட
வீண் மீன்களாய்
மின்மினிக் கூட்டம்...!
அச்சுருத்தும் ஆந்தையின்
அலறல்கள்
இயற்கையின் படைப்பினில்
அரக்க உருவம்
கொண்டுவரும்
மாயத் தோற்றம்...!
ஆளுயர அய்யனாரது
வாள் முனை- அங்கு
எற்றி வைத்த
தீப ஒளியில் - எங்கள்
மன இருள்
விலகுவதாய்
விழுந்திருந்த
நம்பிக்கையின்
விழுதுகள்...!
முகம் பார்க்கும்
மை இருட்டு - அங்கே
மரம் சூடிக் கொண்ட
வீண் மீன்களாய்
மின்மினிக் கூட்டம்...!
அச்சுருத்தும் ஆந்தையின்
அலறல்கள்
இயற்கையின் படைப்பினில்
அரக்க உருவம்
கொண்டுவரும்
மாயத் தோற்றம்...!
ஆளுயர அய்யனாரது
வாள் முனை- அங்கு
எற்றி வைத்த
தீப ஒளியில் - எங்கள்
மன இருள்
விலகுவதாய்
விழுந்திருந்த
நம்பிக்கையின்
விழுதுகள்...!
Wednesday, 31 December 2014
வளர்ச்சி
சாலையோரப் பூக்கள்
சங்கீதம் பாடிவந்த
மென் மழை சாரல்
மரக் கூடுகளில்
உணவூட்டிய
தாய்ப் பறவை
சர சரவென
சாலையை
கடந்து சென்ற
சாரைப் பாம்பு
பதற்றதில்
தடம் புரண்ட
இரு-சக்கர
வாகனம்...!
வீசிய காற்றின்
ஆற்றல் அங்கே
உயிர் கொடுக்க - அவன்
அரைகண் மட்டும்
விழித்திருக்க
வழி வந்தோர்
வாரி அனைத்து
வீதி வரை ஓடிவர
ஓலக் குடிசையெங்கும்
ஓலக் குரல்
நிறைந்துவிட
நிலை உணர்ந்தவன்
உதடுகள் உச்சரித்த
ஒற்றை வார்த்தையும்...!
பசியெடுத்து
உண்ணுகின்ற உணவு
உழைத்துவிட்ட
களைப்பினில்
உருவான நல்லுறக்கம்
உலவுகின்ற
உயிரனங்களை
உருத்தாத
மன நிம்மதி - இவைகளின்
சொந்தக்காரன்
வாழுகின்ற குடிலில்
வளந்திருந்த சந்தோசம்...!
சங்கீதம் பாடிவந்த
மென் மழை சாரல்
மரக் கூடுகளில்
உணவூட்டிய
தாய்ப் பறவை
சர சரவென
சாலையை
கடந்து சென்ற
சாரைப் பாம்பு
பதற்றதில்
தடம் புரண்ட
இரு-சக்கர
வாகனம்...!
வீசிய காற்றின்
ஆற்றல் அங்கே
உயிர் கொடுக்க - அவன்
அரைகண் மட்டும்
விழித்திருக்க
வழி வந்தோர்
வாரி அனைத்து
வீதி வரை ஓடிவர
ஓலக் குடிசையெங்கும்
ஓலக் குரல்
நிறைந்துவிட
நிலை உணர்ந்தவன்
உதடுகள் உச்சரித்த
ஒற்றை வார்த்தையும்...!
பசியெடுத்து
உண்ணுகின்ற உணவு
உழைத்துவிட்ட
களைப்பினில்
உருவான நல்லுறக்கம்
உலவுகின்ற
உயிரனங்களை
உருத்தாத
மன நிம்மதி - இவைகளின்
சொந்தக்காரன்
வாழுகின்ற குடிலில்
வளந்திருந்த சந்தோசம்...!
Friday, 19 December 2014
பரிமாற்றம்
திகைக்கின்ற
திசையறியா பாதையிலும்
உறைகின்ற
பனியிலும்
துப்பாக்கி முன்னே
உயிர் துறந்தும்
உயிர் சுமப்பவளை
காத்து நிற்கும்
காவலர்கள்
ஒரு புறம்...!
கல்லறையின்
கனவு கண்டாலும்
தாய் மடி தேடும்
பிஞ்சுகளை
புதைக்குழுயிலிடும்
பாதையில்லா
பைத்தியக்காரர்கள்
மறு புறம்...!
தன் மக்களின்
உணர்வுகளின் வலியை
உரக்க கூறி நின்ற
தலைமகனின்
உருக்கக் குரல்
ஒறு புறம்...!
மகவுகளை இழந்தாலும்
நிகழ்வுகளின் உண்மையை
உணர்வதற்குள்
அடி மனத்தில்
பகையினில்
தீவைக்கின்ற
திட்டக் குழு
மறு புறம்...!
ஆயுதம் ஏந்திய
அரக்கர்களே
தேடுங்கள் புதுத்
தீவுத்திடலை
உங்களில் பெரியவரை
கண்டெடுக்கும்
போர்க்கலமாய்....!
தீய்மைக்கு தண்டனை
தீமையென்றால்
நீங்கள் திரும்பும்
திசையெங்கும்
தணல் காடாகும்
வரம் பெற்றவர்கள்...!
வாழ விடுங்கள்
வாழப் பிறந்தவர்களை...!
திசையறியா பாதையிலும்
உறைகின்ற
பனியிலும்
துப்பாக்கி முன்னே
உயிர் துறந்தும்
உயிர் சுமப்பவளை
காத்து நிற்கும்
காவலர்கள்
ஒரு புறம்...!
கல்லறையின்
கனவு கண்டாலும்
தாய் மடி தேடும்
பிஞ்சுகளை
புதைக்குழுயிலிடும்
பாதையில்லா
பைத்தியக்காரர்கள்
மறு புறம்...!
தன் மக்களின்
உணர்வுகளின் வலியை
உரக்க கூறி நின்ற
தலைமகனின்
உருக்கக் குரல்
ஒறு புறம்...!
மகவுகளை இழந்தாலும்
நிகழ்வுகளின் உண்மையை
உணர்வதற்குள்
அடி மனத்தில்
பகையினில்
தீவைக்கின்ற
திட்டக் குழு
மறு புறம்...!
ஆயுதம் ஏந்திய
அரக்கர்களே
தேடுங்கள் புதுத்
தீவுத்திடலை
உங்களில் பெரியவரை
கண்டெடுக்கும்
போர்க்கலமாய்....!
தீய்மைக்கு தண்டனை
தீமையென்றால்
நீங்கள் திரும்பும்
திசையெங்கும்
தணல் காடாகும்
வரம் பெற்றவர்கள்...!
வாழ விடுங்கள்
வாழப் பிறந்தவர்களை...!
Subscribe to:
Posts (Atom)