நீண்ட துரம்
பயணிக்கின்ற பாதையில்
நினைவுகள் இளைப்பாற
தேடுகின்ற
நிழலாக
நிம்மதி...!
சேர்த்துவைத்த
பொருட்களில்
தொலைந்து
போனாளும்
பிறருக்காக
செலவழிந்த
நிமிடங்களில்
நிலைத்திருக்கும்
நிம்மதி...!
எவருக்கோ
கிடைத்தது
எனக்கென எழுகின்ற
எண்ணத்தில் - நம்மிலிருந்து
எடுத்தெரியப்பட்டாலும்
வாழ்வின்
இயல்புகளை
ஏற்றுக்கொண்டு
முன்னோக்கி
செல்லும்
முயற்சியில் - ஓடி வந்து
நம்மில்
ஒட்டிக்கொள்ளும்
நிம்மதி...!