Friday, 21 March 2014

நிம்மதி



நீண்ட துரம்
    பயணிக்கின்ற பாதையில்
நினைவுகள் இளைப்பாற
    தேடுகின்ற நிழலாக
நிம்மதி...!


சேர்த்துவைத்த பொருட்களில்
    தொலைந்து போனாளும்
பிறருக்காக செலவழிந்த
    நிமிடங்களில் நிலைத்திருக்கும்
நிம்மதி...!


எவருக்கோ கிடைத்தது
        எனக்கென எழுகின்ற
எண்ணத்தில்  - நம்மிலிருந்து
        எடுத்தெரியப்பட்டாலும்
வாழ்வின் இயல்புகளை
         ஏற்றுக்கொண்டு
முன்னோக்கி செல்லும்
        முயற்சியில் - ஓடி வந்து
நம்மில் ட்டிக்கொள்ளும்
        நிம்மதி...!

Wednesday, 12 March 2014

விழுவதும் இங்கு எழுவதற்கோ!



விழுந்த விதை
   மண்ணில் முட்டி
மரமாகியது...!

விழுந்த மழை
   பூமியின் தாகம்
தணித்தது...!

விழுகின்ற கண்ணீர்
   வலியின் வேதனையை
விட்டொழிக்கிறது...!

விழுகின்ற குழந்தை
   எழுகையில் - அன்னையுடைய
நம்பிக்கையின் நரம்புகளுக்கு
   உயிரூட்டுகிறது...!

விழுவதும் இங்கு
       எழுவதற்க்கோ!
வாழ்வின் விட்டுபோன
       பக்கங்களை
வீசிய காற்றிலாவது
       புறட்டிவிட்டு – அக்
காற்று கூட
   அதிர்ந்துபோக - நம்
வாழ்வுக்கு
       வளுவூட்டிக் கொள்ள...!

Friday, 7 March 2014

அஞ்சரைப் பெட்டி



கேட்டது எதுவானாலும்
    அவள் கேட்க மறுக்கா
ஆயுதமாய் அறுசுவையை
    கூட்‌டவல்ல - இவ்
அஞ்சரைப் பெட்டி...!

மண் கூட்டி
    விளையாடும்
சிறுமிகளும் மறக்காமல்
    சித்தரிக்கும்
மணி மகுடம் - இவ்
    அஞ்சரைப் பெட்டி...!

மாடி வீட்டு
    ஜன்னல் வழியும்
ஓலை வீட்டு
    வாசல் வழியும்
வேற்றுமை இல்லாது
    வீசுகின்ற வாசனையின்              
சொந்தக்காரன் - இவ்
    அஞ்சரைப் பெட்டி...!

அயிரம் மைல்  தாண்டினாலும்
        அன்னையின் கைதேர்ந்த - அவள்
அன்பினில் அரைத்தெடுத்த
        கலவையை அலுக்காமல்
சுமந்து செல்லும் - இவ்
       அஞ்சரைப் பெட்டி...!

Monday, 24 February 2014

வாழ்வு வளம் பெற



ஒரு மாணவன் தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவன் கூரிய உண்மையில் ஆசானின் திகைப்பு...

அன்று
   மன்னன் மக்களுக்கு
கொடுத்ததால் - அது
   மன்னர் ஆட்சி...!

இன்று
  ஆட்சி செய்பவர்கள்
மக்களிடம் எடுப்பதால் – இது
   மக்கள் ஆட்சி...!